Wednesday, April 10, 2013

நகரங்களை முற்றுகையிட்ட சனத்தொகை இப்போது புறநகரங்களை ஆக்கிரமிக்கின்றது

நகரங்களை முற்றுகையிட்ட சனத்தொகை இப்போது புறநகரங்களை  ஆக்கிரமிக்கின்றது

19வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் சனத்தொகை மிகக் குறைவாக இருந்தது. அன்று எங்கள் சனத்தொகை நாட் டின் தென்மேற்கு பிரதேசத்திலும் வடக்கில் யாழ்ப்பாண குடா நாட்டிலும் மாத்திரமே அதிகமாக இருந்தது. இலங்கையின் முதலா வது சனத்தொகை கணக்கெடுப்பு 1871ம் ஆண்டில் நடத்தப்பட்ட போது எமது சனத்தொகை 28 இலட்சமாக இருந்தது.
அன்றைய சனத்தொகைக்கும் 1980ம் ஆண்டு தசாப்தத்தின் சனத் தொகைக்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கின்றது. 1871ம் ஆண்டின் சனத்தொகையை விட 1980ம் ஆண்டு தசாப்தத்தில் சனத்தொகை 6 மடங்கு அதிகரித்துள்ளது. 1900ம் ஆண்டில் இந்தி யாவில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பெருந்தோட்டங்க ளில் பணியாற்றுவதற்காக இங்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து சனத்தொகையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
1900ம் ஆண்டுக்குப் பின் சனத்தொகையின் அதிகரிப்பு மட்டுப்படுத்தப் பட்டிருந்தமைக்கு மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு மக்கள் பலியாகியதும் ஒரு காரணமாகும். இலங்கை சுதந்திரமடை ந்த பின்னரே சனத்தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 1981ம் ஆண் டில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் படி ஒரு கோடியே 48 இலட்சத்து 46 ஆயிரத்து 750 ஆக உயர்ந்திருந்தது.
1991ம் ஆண்டின் சனத்தொகை ஒரு கோடி 80 இலட்சமாக உயர்ந்தது. பின் னர் 2001ல் இரண்டு கோடியாகவும் அதையடுத்து இரண்டு கோடி 10இலட்சமாகவும் அதிகரித்தது. 1971ம் ஆண்டுக்கும் 1981ம் ஆண் டுக்கும் இடையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மூன்று இலட்சத்து 13 ஆயிரம் மலையக தோட்டத் தொழிலாளர்கள் இந் திய பிரஜாவுரிமை பெற்று இங்கிருந்து இந்தியா திரும்பினார்கள்.
மத்திய கிழக்கு, அராபிய நாடுகளில் வேலைவாய்ப்பு கிடைத்ததனால் 1981ல் மாத்திரம் 57 ஆயிரம் இலங்கையர் மத்திய கிழக்கு நாடுக ளுக்கு சென்றனர். இந்த காலகட்டத்தில் பிறப்பு விகிதம் குறைந்த காரணத்தினால் இலங்கையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண் ணிக்கை அதற்கு குறைந்த வயதினரை விட அதிகரித்தது.
யாழ் குடாநாட்டிலும் அதனை சார்ந்த கரையோரப் பகுதியிலும் சனத் தொகை விகிதாசாரம் அதிகரித்தது. கொழும்பு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றரில் 2 ஆயிரத்து 605 பேர் உள்ளடக்கப்பட்டிருந்த னர். ஆனால் வரண்ட பிரதேச மாவட்டங்களான வவுனியா, மன் னார், முல்லைத்தீவு மற்றும் மொனராகலையில் ஒரு சதுர கிலோ மீற்றரில் 55 பேர் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தனர். இப்பிரதேசங் களில் மழைவீழ்ச்சியின்றி விவசாயம் செய்வதற்கு ஒவ்வாத காரண த்தினால் அங்கு மக்கள் வாழவிரும்பாமல் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதே காரணமாகும்.
20ம் நூற்றாண்டில் மக்கள் வேலைவாய்ப்பை தேடியும் பிள்ளைகளின் கல்வியை கருத்திற் கொண்டும் நகரப்புறங்களில் குடியேறினார்கள். இதனால் நகரங்களின் சனத்தொகை பன்மடங்கு அதிகரிக்க ஆரம் பித்தது. 1871ல் நகரங்களில் வாழ்ந்தவர்களின் விகிதாசாரம் 11 ஆகும். இது 1946ம் ஆண்டில் 15 வீதமாகவும் 1981ம் ஆண்டு 21.5சதவீத மாகவும் அதிகரித்தது.
1985ல் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்ததனால் வயோதிபர்களின் எண் ணிக்கை எமது சனத்தொகையில் அதிகரிக்க ஆரம்பித்தது. இது சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒரு பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியது. இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் பெருமளவு மக் கள் திருமணம் புரிந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த காரணத் தினால் வேலைவாய்ப்பை பெறுவதற்கு மக்களிடையே போட்டி அதிகரித்தது.
இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் நல்வாழ்வு வசதி களை மக்களுக்கு பெருமளவு செய்து கொடுக்க வேண் டிய கடப்பாட்டினை அரசாங்கங்கள் செய்ய வேண்டியிருந்தன. அத் துடன் வீட்டுப் பிரச்சினையும் மோசமடைந்திருந்தது. மக்கள் நகரங் களைச் சார்ந்த பிரதேசங்களில் வாழ ஆரம்பித்ததனால் நகரங்களில் வியாபாரமும் வணிகத்துறையும் தழைத்தோங்கியது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மக்களின் குடிபெயர்வு 4 வெவ்வேறு வகையாக அமைந்திருந்தது. ஒவ்வொரு வருடமும் கூடுதலான மக் கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர். அடுத்தபடியாக நகரங்களில் சனத்தொகை அதிகரித்ததனால் நக ரங்களை அடுத்துள்ள புறநகரங்களில் மக்கள் குடியேற ஆரம்பித் தார்கள்.
1970ம் தசாப்தத்தில் கொழும்பு நகரின் சனத்தொகை உண்மையிலேயே வீழ்ச்சியடைந்திருந்தது. அதற்கு காரணம் தெஹிவளை, நுகே கொடை, மஹரகம, கோட்டை, பத்தரமுல்லை போன்ற பகுதிகளில் புதிய நவீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பில் இருந்த வர்கள் இப்பிரதேசங்களில் குடியேறியமையே காரணமாகும்.
அரசாங்கத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்ட காரணத்தினால் நகரப்புறங்களில் வாழ்ந்த பெரும்பாலான விவசாயி கள் ஈரலிப்பு வலயத்திற்கு குடிபெயர்ந்து விவசாயம் செய்ய அக்கறை காட்டினார்கள். அதற்கு அடுத்தபடியாக இனக்கலவரமும், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக 1970ம், 1980ம் ஆண்டு தசாப்தங்களில் நகரப்புறங்களில் இருந்து வெளியேறினார்கள்.
அத்துடன் 1970ம் ஆண்டு தசாப்தத்தில் இங்கிருந்த பெருந்தோட்ட கம் பனிகளில் வேலை செய்த இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் இந் தியாவுக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றார்கள். 1983ம் ஆண் டின் கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் சுமார் ஒரு இலட்சம் தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள்.
1987ம், 1988ம் ஆண்டுகளில் இந்திய அமைதிகாக்கும் படையினர் வன் முறையில் ஈடுபட்டவர்களை தேட ஆரம்பித்ததை அடுத்து யாழ்ப் பாணக் குடாநாட்டில் வாழ்ந்த பெரும்பாலானவர்கள் தங்கள் வீடு களை விட்டு தற்காலிக அகதி முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். அத்துடன் இப்போது பெண்களின் ஆயுள்காலம் அதிகரித்தும் இரு க்கிறது. அதுமட்டுமன்றி இன்று பெண்களின் சனத்தொகை ஆண் களை விட அதிகரித்து விளங்குகிறது.
இப்படியான சூழ்நிலையில் பெண்களுக்கு பாராளுமன்றத்திலும் ஏனைய பொறுப்பான இடங்களிலும் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெற் றுக் கொடுப்பது அவசியமாகும்.