Showing posts with label புவியியல். Show all posts
Showing posts with label புவியியல். Show all posts

Tuesday, March 12, 2019

பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்



பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்
உலகளாவிய ரீதியில் பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள் பற்றி உரத்துப் பேசப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் அதனை கட்டுப்படுத்துவது பற்றி எமது தேசமும் அதீத பிரயத்தனம் எடுப்பதனை கண்டு கொள்ள முடிகின்றது. இந்த முயற்சி ஆரோக்கியமானதாக பார்க்கப்படுதல் வேண்டும். எனினும் இதில் பயணிக்க வேண்டியது நெடுந்தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் , பிளாஸ்ரிக் கடந்த அரை நூற்றாண்டாக எமது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள நிலையில் அதிலிருந்து இலகுவாக விடுபட முடியாது. மனிதனில் இருந்து இவற்றைப் பிரிக்க முடியாமைக்கான மிக முக்கிய காரணி இலகு தன்மையும் சௌகரியமுமாகும். பிளாஸ்ரிக்கின் வருகை மனிதனுக்கு நன்மைகளைக் கொண்டு வந்த போதிலும் அவற்றின் கழிவகற்றலால் ஏற்படும் பாரிய பாரிய பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வதில்லை அல்லது அலட்சியமாக இருந்து விடுகின்றோம்.

பொலித்தீன்- பிளாஸ்ரிக் தடுப்பு நடவடிக்கைகளில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. பிள்ளைகளை பாடசாலை அனுமதிக்கும் போதே பிளாஸ்ரிக் பாவனையின் தீமைகள் பற்றியும் அதற்கு மாற்றீடாக உபயோகிக்கக் கூடிய பொருட்கள் பற்றியும் தீவிரமாக சொல்லப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அநேகமான பாசாலைகளில் நிறுவப்பட்டுள்ள உணவகங்களில் பொலித்தீன் பாவனை இல்லாமலாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே இது விடயத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.
போதை ஒழிப்பு தேசிய ரீதியாக எழுச்சி பெற்றுள்ள இத்தறுவாயில் பொலித்தீன் - பிளாஸ்ரிக் பொருட்கள் பற்றியும் பேசுவதும் அவசியம்.

பொலித்தீன் - பிளாஸ்ரிக் கழிவுகள் சிறுசிறு துகள்களாக மாற்றம் கண்ட போதிலும் அது உக்கி அழிவதில்லை. இதனால் சூழலுக்கும் காலநிலைக்கும் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகின்றது. பிளாஸ்டிக் - பொலித்தீன் கழிவுகள் நிலத்துக்கும் நிலத்தடி நீருக்கும் கடல் நீருக்கும் மாத்திரமின்றி வளிமண்டலத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் மனிதர் மாத்திரமின்றி விலங்குகள் கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. தாவரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சூழலில் குறிப்பாக நிலத்தில் வாழுகின்ற நுண்ணுயிர்க் கிருமிகளை கூட விட்டு இக்கழிவுகள் விட்டு வைக்கவில்லை.

மனித வாழ்வுக்கு இன்றியமையாதது காற்று நீர் உணவு உறையுள் என்பவையாகும். மனித வாழ்வை இலகுபடுத்த உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பன இவை அனைத்தையும் மாசுபடுத்தி மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பன சிறுசிறு துகள்களாகி கண்ணுக்குப் புலப்படாத மைக்குரோன் அளவை விடவும் சிறியதான நனோ அளவீடுகளில் சூழல் எங்கும் பரவிக் கலந்து பல வழிகளில் மனித உடலை அடைந்து கேடு விளைவிக்கின்றன.

நாம் பாவித்து விட்டு கழிக்கும் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் மீள்சுழற்சிக்கு கொண்டு வரப்படுவது மிகவும் சொற்பமே ஆகும். மண்ணில் புதைக்கப்படுகின்ற இக்கழிவுகள் உக்கி அழிவதில்லை என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் நமது நிலங்களுக்குள் புதைக்கப்பட்ட பிளாஸ்ரிக் - பொலித்தீன்களை ஏதோ ஒரு தேவைக்காக நிலத்தை கிளறுகின்றபோது கண்டெடுக்க முடிகின்றது.
அதேவேளை அவற்றில் ஒரு பகுதி சிறு துகள்களாகி மண்ணில் இருந்து மழைநீருடன் நிலத்தடி நீரோடு இணைகின்றது. பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் எரிக்கப்படும் போது அவை அதிக மாற்றமின்றி வளிமண்டலத்தில் சேர்கின்றன. இத்துகள்களும் மழைநீரோடு கலந்து நிலத்தை வந்தடைந்து கீழிறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து எமது குடிநீரும் மாசடைகிறது.

மழையுடன் கலந்து வரும் இதன் துகள்கள் ஆற்றுநீரையும் நீர்த் தேக்கங்களையும் மாசுபடுத்துகின்றன. இதனால் ஆற்றிலிருந்து பெறப்படும் குடிநீரும் மாசடைந்தே காணப்படுகின்றது. வடிகட்டலையும் சுத்திகரிப்பையும் தூண்டும் அளவிற்கும் பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறியனவாக உள்ளமையால் குடிநீர் மாசடைவதைத் தவிர்க்க முடியவில்லை.
தற்போது வாழ்கின்ற முதியவர்கள் பலர்இதாங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக பெருமையுடன் கூறிக் கொள்வர்.

அதன் உண்மைநிலை என்னவென்றால் அப்போதைய காலத்தில் சூழலோ நீரோ இப்போது மாசுபட்டிருப்பது போல் இருந்ததில்லை என்பதே உண்மை.
அன்று கிணற்று நீர் பாதுகாக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்பட்டது. இன்று அப்படியல்ல. சூழல் மிகமோசமாக மாசுபட்டுள்ளது. கொதிக்க வைப்பதாலோ வடிகட்டிகள் மூலம் வடிகட்டுவதனாலோ பிளாஸ்ரிக் துகள்களை முழுமையாக அகற்ற முடியாது.

உலகளாவிய ரீதியில் இன்று குடிநீரில் 80வீதத்துக்கு மேற்பட்ட இடங்களில் பிளாஸ்ரிக் மாசுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பிளாஸ்ரிக் துகள்களால் மாசுபட்ட குடிநீர் நிறைந்த இடங்களாக அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அறிவதும் அவசியம்.

பிளாஸ்ரிக் துகள்கள் மனித உடலை தண்ணீர் உணவு சுவாசம் என்பவற்றின் ஊடாக வந்தடைகின்றன. அதிலும் நீருடன் உடலில் கலக்கும் துகள்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதனால் இவை சமிபாட்டுத்தொகுதியில் அகத்துறிஞ்சப்பட்டு இரத்தச் சுற்றுடன் கலந்து சகல உறுப்புக்களையும் சென்றடைகின்றன.

கலச் சுவர்களையும் இவை ஊடறுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இவற்றை உடலை விட்டு வெளியேற்றவும் முடியாமல் ஈரல் சிறுநீரகம் என்பன சிரமத்தை எதிர்நோக்குகின்றன. இதனால் இத்துகள்களின் படிவால் இந்த உறுப்புக்கள் மெதுமெதுவாக பாதிப்புக்குள்ளாகின்றன. காலவோட்டத்தில் இவற்றின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாவதுடன் இறுதியில் இவ்வுறுப்புக்கள் செயலிழக்கும் நிலைமை உருவாகிறது என்கின்றனர் நிபுணத்துவ வைத்தியர்கள். பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பவற்றால் ஏற்படுகின்ற மிக மிக்கியமான நோய் புற்றுநோய் ஆகும். இன்று நாம் டெங்கு பரவுதலைப் பற்றி அச்சமடைவதைப் போல இதற்கு அஞ்சுவதில்லை.

எனினும் புற்றுநோய் ஏற்படுத்தும் மரணங்கள் டெங்கு மரணங்களை விட பல மடங்காகும். சூழலில் சேரும் பிளாஸ்ரிக் கழிவுகள் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக் துகள்கள் கருவிலுள்ள குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதற்கு காரணமாகின்றன இதனை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும்

நன்றி 

Sunday, May 26, 2013

2012ஆம் ஆண்டில் உலக சனத்தொகை




 2012ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 7 பில்லியன்; வளப்பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம்: அமெரிக்கா
2012ஆம் ஆண்டு உலகத்தின் சனத்தொகை 7 பில்லியனை எட்டிவிடுமென்பதால் இயற்கை வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் எதிர்வுகூறியுள்ளது.

உலகத்தில் தற்பொழுது 6.7 பில்லியன் மக்கள் வாழ்ந்துவருவதுடன், அமெரிக்கா 304 மில்லியன் சனத்தொகையுடன் உலகத்தில் மூன்றாவது சனத்தொகை கூடியநாடாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம், சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா இருப்பதாகக் கூறியுள்ளது.

இலங்கை 21,128,773 பேர் சனத்தொகையுடன் உலகத்தில் 53வது இடத்தில் உள்ளது.

உலகத்தின் சனத்தொகை 1999ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தாண்டியது. இதன்படி, 13 வருடங்களில் அது ஒரு பில்லியனால் அதிகரிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒப்பீட்டு ரீதியில், 1800ஆம் ஆண்டுவரையில் உலக சனத்தொகை 1 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனக் குறிப்பிடும் சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் நிபுணர் கார்ல் ஹஊப், அடுத்த 130 வருடங்கள் வரையில் சனத்தொகை 2 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனவும் கூறினார்.

“அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தற்பொழுது சனத்தொகை அதிகரித்துச் செல்கின்றமையை இலகுவில் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும்” ஹஊப் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் கண்டிருக்கும் மருத்துவ மற்றும் போசாக்கு போன்றவற்றினால் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், கலாச்சார மாற்றங்கள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்தல் மற்றும் வேலைத் தளங்களுக்குச் செல்தல் போன்றன அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார். சனத்தொகைப் பெருக்கம் அதிகமாக இருந்தாலும் அதன் வளர்ச்சிவீதம் குறைவாகக் காணப்படுவதற்கு அவை முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சனத்தொகை வருடாந்தம் 1.2 வீதத்தால் அதிகரிக்கிறது. எனினும், 2050ஆம் ஆண்டில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 0.5 ஆகக் காணப்படும் என அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அப்பொழுது உலகத்தில் சனத்தொகை கூடிய நாடாக சீனா இருக்கின்றபோதும், இந்தியா அதனை மிஞ்சிச் செல்வதற்குச் சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் பொருளாதார விருத்தியால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்து அதனால் அவற்றின் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சனத்தொகைக் கணப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், பூமியில் எத்தனைபேர் வாழமுடியும் என்பது பற்றி இதுவரை கணிப்பிடப்படவில்லை என வெஷிங்டனில் செயற்பட்டுவரும் பூரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லியம் ப்ஃரே தெரிவித்துள்ளார். பூமியில் காணப்படும் வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பூமியில் வாழக்கூடியவர்களின் சனத்தொகை அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில்மய நாடுகள் ஏனைய வளங்களுக்குச் சமமான அளவு எரிபொருளையும் பயன்படுத்துகின்றன. எனினும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான பெண் சராசரியாக 6ற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆபிரிக்கப் பிராந்தியத்தின் மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளில் ஒரு பெண் 7 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வுகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளன

Wednesday, April 10, 2013

நகரங்களை முற்றுகையிட்ட சனத்தொகை இப்போது புறநகரங்களை ஆக்கிரமிக்கின்றது

நகரங்களை முற்றுகையிட்ட சனத்தொகை இப்போது புறநகரங்களை  ஆக்கிரமிக்கின்றது

19வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் சனத்தொகை மிகக் குறைவாக இருந்தது. அன்று எங்கள் சனத்தொகை நாட் டின் தென்மேற்கு பிரதேசத்திலும் வடக்கில் யாழ்ப்பாண குடா நாட்டிலும் மாத்திரமே அதிகமாக இருந்தது. இலங்கையின் முதலா வது சனத்தொகை கணக்கெடுப்பு 1871ம் ஆண்டில் நடத்தப்பட்ட போது எமது சனத்தொகை 28 இலட்சமாக இருந்தது.
அன்றைய சனத்தொகைக்கும் 1980ம் ஆண்டு தசாப்தத்தின் சனத் தொகைக்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கின்றது. 1871ம் ஆண்டின் சனத்தொகையை விட 1980ம் ஆண்டு தசாப்தத்தில் சனத்தொகை 6 மடங்கு அதிகரித்துள்ளது. 1900ம் ஆண்டில் இந்தி யாவில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பெருந்தோட்டங்க ளில் பணியாற்றுவதற்காக இங்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து சனத்தொகையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
1900ம் ஆண்டுக்குப் பின் சனத்தொகையின் அதிகரிப்பு மட்டுப்படுத்தப் பட்டிருந்தமைக்கு மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு மக்கள் பலியாகியதும் ஒரு காரணமாகும். இலங்கை சுதந்திரமடை ந்த பின்னரே சனத்தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 1981ம் ஆண் டில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் படி ஒரு கோடியே 48 இலட்சத்து 46 ஆயிரத்து 750 ஆக உயர்ந்திருந்தது.
1991ம் ஆண்டின் சனத்தொகை ஒரு கோடி 80 இலட்சமாக உயர்ந்தது. பின் னர் 2001ல் இரண்டு கோடியாகவும் அதையடுத்து இரண்டு கோடி 10இலட்சமாகவும் அதிகரித்தது. 1971ம் ஆண்டுக்கும் 1981ம் ஆண் டுக்கும் இடையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மூன்று இலட்சத்து 13 ஆயிரம் மலையக தோட்டத் தொழிலாளர்கள் இந் திய பிரஜாவுரிமை பெற்று இங்கிருந்து இந்தியா திரும்பினார்கள்.
மத்திய கிழக்கு, அராபிய நாடுகளில் வேலைவாய்ப்பு கிடைத்ததனால் 1981ல் மாத்திரம் 57 ஆயிரம் இலங்கையர் மத்திய கிழக்கு நாடுக ளுக்கு சென்றனர். இந்த காலகட்டத்தில் பிறப்பு விகிதம் குறைந்த காரணத்தினால் இலங்கையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண் ணிக்கை அதற்கு குறைந்த வயதினரை விட அதிகரித்தது.
யாழ் குடாநாட்டிலும் அதனை சார்ந்த கரையோரப் பகுதியிலும் சனத் தொகை விகிதாசாரம் அதிகரித்தது. கொழும்பு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றரில் 2 ஆயிரத்து 605 பேர் உள்ளடக்கப்பட்டிருந்த னர். ஆனால் வரண்ட பிரதேச மாவட்டங்களான வவுனியா, மன் னார், முல்லைத்தீவு மற்றும் மொனராகலையில் ஒரு சதுர கிலோ மீற்றரில் 55 பேர் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தனர். இப்பிரதேசங் களில் மழைவீழ்ச்சியின்றி விவசாயம் செய்வதற்கு ஒவ்வாத காரண த்தினால் அங்கு மக்கள் வாழவிரும்பாமல் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதே காரணமாகும்.
20ம் நூற்றாண்டில் மக்கள் வேலைவாய்ப்பை தேடியும் பிள்ளைகளின் கல்வியை கருத்திற் கொண்டும் நகரப்புறங்களில் குடியேறினார்கள். இதனால் நகரங்களின் சனத்தொகை பன்மடங்கு அதிகரிக்க ஆரம் பித்தது. 1871ல் நகரங்களில் வாழ்ந்தவர்களின் விகிதாசாரம் 11 ஆகும். இது 1946ம் ஆண்டில் 15 வீதமாகவும் 1981ம் ஆண்டு 21.5சதவீத மாகவும் அதிகரித்தது.
1985ல் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்ததனால் வயோதிபர்களின் எண் ணிக்கை எமது சனத்தொகையில் அதிகரிக்க ஆரம்பித்தது. இது சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒரு பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியது. இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் பெருமளவு மக் கள் திருமணம் புரிந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த காரணத் தினால் வேலைவாய்ப்பை பெறுவதற்கு மக்களிடையே போட்டி அதிகரித்தது.
இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் நல்வாழ்வு வசதி களை மக்களுக்கு பெருமளவு செய்து கொடுக்க வேண் டிய கடப்பாட்டினை அரசாங்கங்கள் செய்ய வேண்டியிருந்தன. அத் துடன் வீட்டுப் பிரச்சினையும் மோசமடைந்திருந்தது. மக்கள் நகரங் களைச் சார்ந்த பிரதேசங்களில் வாழ ஆரம்பித்ததனால் நகரங்களில் வியாபாரமும் வணிகத்துறையும் தழைத்தோங்கியது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மக்களின் குடிபெயர்வு 4 வெவ்வேறு வகையாக அமைந்திருந்தது. ஒவ்வொரு வருடமும் கூடுதலான மக் கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர். அடுத்தபடியாக நகரங்களில் சனத்தொகை அதிகரித்ததனால் நக ரங்களை அடுத்துள்ள புறநகரங்களில் மக்கள் குடியேற ஆரம்பித் தார்கள்.
1970ம் தசாப்தத்தில் கொழும்பு நகரின் சனத்தொகை உண்மையிலேயே வீழ்ச்சியடைந்திருந்தது. அதற்கு காரணம் தெஹிவளை, நுகே கொடை, மஹரகம, கோட்டை, பத்தரமுல்லை போன்ற பகுதிகளில் புதிய நவீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பில் இருந்த வர்கள் இப்பிரதேசங்களில் குடியேறியமையே காரணமாகும்.
அரசாங்கத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்ட காரணத்தினால் நகரப்புறங்களில் வாழ்ந்த பெரும்பாலான விவசாயி கள் ஈரலிப்பு வலயத்திற்கு குடிபெயர்ந்து விவசாயம் செய்ய அக்கறை காட்டினார்கள். அதற்கு அடுத்தபடியாக இனக்கலவரமும், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக 1970ம், 1980ம் ஆண்டு தசாப்தங்களில் நகரப்புறங்களில் இருந்து வெளியேறினார்கள்.
அத்துடன் 1970ம் ஆண்டு தசாப்தத்தில் இங்கிருந்த பெருந்தோட்ட கம் பனிகளில் வேலை செய்த இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் இந் தியாவுக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றார்கள். 1983ம் ஆண் டின் கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் சுமார் ஒரு இலட்சம் தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள்.
1987ம், 1988ம் ஆண்டுகளில் இந்திய அமைதிகாக்கும் படையினர் வன் முறையில் ஈடுபட்டவர்களை தேட ஆரம்பித்ததை அடுத்து யாழ்ப் பாணக் குடாநாட்டில் வாழ்ந்த பெரும்பாலானவர்கள் தங்கள் வீடு களை விட்டு தற்காலிக அகதி முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். அத்துடன் இப்போது பெண்களின் ஆயுள்காலம் அதிகரித்தும் இரு க்கிறது. அதுமட்டுமன்றி இன்று பெண்களின் சனத்தொகை ஆண் களை விட அதிகரித்து விளங்குகிறது.
இப்படியான சூழ்நிலையில் பெண்களுக்கு பாராளுமன்றத்திலும் ஏனைய பொறுப்பான இடங்களிலும் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெற் றுக் கொடுப்பது அவசியமாகும்.

Sunday, April 7, 2013

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்
பெப்ரவரி 21  – சர்வதேச தாய்மொழி தினம்
மார்ச் 8     – சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 21    - இனப்பாரபட்ச ஒழிப்பு தினம்
மார்ச் 22    - உலக நீர் தினம்
மார்ச் 23    – உலக வளிமண்டலவியல் தினம்
ஏப்ரல் 7    – உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22 - உலக புவிதினம்
ஏப்ரல் 23   – உலக புத்தக தினம்
மே 3      – உலக பத்திரிகை சுதந்திர தினம்
மே 15     - உலக குடும்ப தினம்
மே 17     – உலக தொலைத்தொடர்பு தினம்
மே 22     - உயிரின பல்வகைமை தினம்
மே 31     – உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்
ஜுன் 4     – சர்வதேச சிறுவர் தினம்
ஜுன் 5    – உலக சுற்றாடல் தினம்
ஜுன் 17   – காடுகள் தினம்
ஜுன் 20    – உலக அகதிகள் தினம்
ஜுன் 26    – போதைப்பொருள் எதிர்ப்பு தினம்
ஜுலை 11   – உலக சனத்தொகை(குடித்தொகை) தினம்
ஆகஸ்ட் 9   – ஆதிவாசிகள் தினம்
ஆகஸ்ட் 12   – சாவதேச இளைஞர் தினம்
செப்டம்பர் 16 - சர்வதேச ஓசோன் தினம்
ஒக்டோபர் 1  - சர்வதேச முதியோர் தினம்
ஒக்டோபர் 5  – உலக ஆசிரியர்கள் தினம்
ஒக்டோபர் 9  – உலக தபால் தினம்
ஒக்டோபர் 10  – உலக மனநல திம்
ஒக்டோபர் 16  -  உலக உணவு தினம்
ஒக்டோபர் 17  – வறுமை ஒழிப்பு தினம்
ஒக்டோபர் 24  – ஐக்கிய நாடுகள் தினம்
ஒக்டோபர் 24  – உலக அபிவிருத்தி தகவல் தினம்
நவம்பர் 16  – சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
நவம்பர் 26  – ஆபிரிக்க கைத்தொழில் மயமாக்கல் தினம்
நவம்பர் 21  – உலக தொலைக்காட்சி தினம்
நவம்பர் 25  – பெண் வண்முறை எதிர்ப்பு தினம்
டிசம்பர் 1  – சர்வதேச எயிட்ஸ் தினம்
டிசம்பர் 2  – அடிமைத்தன ஒழிப்பு தினம்
டிசம்பர் 3  – வலது குறைந்தோர் தினம்
டிசம்பர் 10  – மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 18  – சர்வதேச இடப்பெயர்வாளர் தினம்

நீர்மாசடைதல்

 நீர்மாசடைதல்

நீரானது அதன் பௌதீக. இரசாயண உயிரியல் அம்சங்களில் மாற்றமடைகின்றபோது  நீர் மாசடைதல் எனப்படுகின்றது. அதாவது ஏரிகள் ஆறுகள்இ கடல்கள்இ நிலக்கீழ் நீர் முதலிய நீர் நிலைகளில் காணப்படும் நீர் மனித நடவடிக்கைகளால் அதன் தூய்மையை இழந்து குறிப்பிட்ட பிரதேச் சூழல்தொகுதியின் பயன்பாட்டிற்கு உதவாதமுறையில் மாற்றமடைகின்ற தன்மையினை நீர் மாசடைதல் எனக் குறிப்பிடலாம்.

இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பஇ அல்காப்பெருக்கம்இ புயல்இ நிலநடுக்கம்இ வரட்சி போன்றவற்றாலும் நீரின் தரத்திலும் அதன் சூழலியல் நிலைமையிலும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. இருந்த போதிலும் மிக அதிகளில் மனித செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு மனித பயன்பாட்டிற்கு உதவாமலும்இ உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலை நீர் மாசடைதலினால் ஏற்படுகின்றது.

நீர் மாசடைதலை ஏற்படுத்தும் மாசுக்களின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஓரிட மூல மாசடைதல். அதாவது ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதினால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகின்றது. இரண்டாவது பரந்த மூல மாசடைதல். அதாவது இது ஒரு பரந்த இடப்பரப்பிலிருந்து சிறிது சிறிதாக சேகரிக்கப்படும் மாசுக்களால் உருவாகின்றது.

1)                  நீர் மாசடையும் வழிமுறைகள்:-

•           விவசாய நடவடிக்கைகள் - விவசாய நடவடிக்கைகளினால் பல்வேறு விதத்தில் நீர் மாசாக்கம் அடைகின்றது. விவசாய நிலங்களில் கிருமி நாசினிகள்இ பீடை நாசினிகள்இ மற்றும் இரசாயண உரங்கள் என்பவற்றின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட நிலத்தினூடாக நீரானது வெள்ளக் காலங்களில் பாய்ந்து செல்லும்போதோ அல்லது நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கூடாக ஆறுகளில் இந்த நீர் கலக்கின்றபோது அத்தகைய மாசுக்களை கழுவிசேர்த்த வண்ணமே நகர்கின்றது. மேலும் இரசாயண கிருமிநாசினிஇ பீடை நாசினி என்பவற்றின் கொள்கலன்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் விடப்படுகின்றபோதும் நீர் மாசடைவதற்கு வழிவகுக்கின்றது. வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை விவசாய நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுவதனால் இத்தகைய மாசாக்கம் இடம்பெறுகின்றது. குறிப்பாக இந்தியாஇ இலங்கை முதலிய நாடுகளைக் குறிப்பிடலாம்.

•           கைத்தொழில் நடவடிக்கைகள் - இன்று உலகின் அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாகவும்இ அதிக தொழில்வாய்ப்பை உருவாக்கின்ற ஒரு துறையாகவும் கைத்தொழில்துறை காணப்படுகின்றது. கைத்தொழில்துறையில்பல்வேறு விதத்தில் வெளியேறும் கழிவுகள் நீர்நிலைகளில் சேர்க்கப்படுவதனால் நீர் நிலைகள் மாசடைகின்றது. குறிப்பாக இரசாயணப் பொருட்கள் தயாரித்தல்இ இலத்திரணியல் கழிவுகள்இ உணவு பதனிடல் கழிவுகள்இ மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களைக் குளிரவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு  பின்னர் நீர்நிலைகளில் விடப்படும் சூடானநீர் போன்றவற்றின் காரணமாக நீர்நிலைகள் மாசடைகின்றன.

•           நகராக்கம் - நகராக்கம் காரணமாகவும் அதிளவில் கழிவுகள் நீரில் கலக்கின்றன. குறிப்பாக நகரப்பகுதிகளில் இடவசதிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் தமது வீடுகளில் செரும் கழிவுகளை அயலிலள்ள நீர் நிரைகளில் வீசிவிடுகின்றனர். மேலும் நகரப்பகுதிகளில் இருந்து மிதமிஞ்சிய அளவில் சாக்கடைகளுக்கூடாகப் போய்ச் சேரும் மாசுக்களாலும் நீர் மாசடைகின்றது. இவற்றை விட நகரப்பகுதிகளில் பெரும்பாலும் அருகருகில் அமைக்கப்பட்டிரக்கும் மலசலகூடக்கழிவகளினாலும் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது. குறிப்பாக தரைக்கீழ் நீhவளம் கொண்ட கரையோர நகரப் பிரதேசங்களில் இந்நிலைமையினை அவதானிக்கலாம்.

•           கண்டல் தாவரங்கள் மற்றும் முருகைக்கற்பாறைகளை அகற்றுதல் - கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் கண்டல்தாவரங்களும் முருகைக்கற்பாறைகளும் உவர்நீர் தரைக்கீழ் நீருடன் சேர்ந்துவிடாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இவற்றை அகற்றுகின்றபோது அல்லது அழிக்கின்றபோது தரைக்கீழ் நீருடன் நேரடியாக உவர்நீர் கலந்து தரைக்கீழ் நீரில் உவர்த்தன்மையை அதிகரிக்கின்றது.

•           எண்ணெய்க்கசிவு- ஏரிகளுக்கூடாக அல்லது கடலிலே பயணம் செய்கின்ற கப்பல்களிலிருந்து எண்ணெய்க்கசிவகள் ஏற்படுகின்றபோதும் நீர் மாசடைகின்றது. அமெரிக்காவில் பேரேரி போன்ற ஏரிகள் போக்குவரத்திற்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினூடாகப் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து எண்ணெய் கசிகின்றபோது நீரின் தன்iயை மாற்றியமைக்கின்றது. கடலிலெ பயணம் செய்யும் கப்பல்களினாலும் மற்றும் எண்ணெய் கிணறுகளின் கசிவினாலும்  கடற்கரை நீர் மாசடைகின்றது. குறிப்பாக 2010 இல் மெக்சிக்கோ குடாவினுள் எற்பட்ட பாரிய எண்ணெய் கசிவினால் பெருமளவில் கடற்கரை நீர் மாசடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

•           வெப்பமடைந்த நீர் – நீர்மின்சாரம்இ தொழிற்சாலைகளில் இயந்திரங்களை குளிர்ச்சிப்படுத்துவதற்காக நீரானது பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் நீர்த்தொகுதியுடன் இணைகின்றபோது அந்நீர் வெப்படைந்த நீராக மாற்றமடைகின்றர்து. குறிப்பிட்ட நீரில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை உருவாவதுடன்இ அது வேறோர் நீர்த்தொகுதியில் கலக்கின்றபோதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கரையோரங்களில் அமைக்கப்படுகின்ற அனல் மின் நிலையங்களினால் இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் கடலினுள் விடப்படுகின்றது. இதனால் மீன்வளம் பாதிப்படைவதுடன்இ அயற்சூழலிலும் இது தாக்கத்தை தோற்றுவிக்கின்றது.


2)                  நீர் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள்:-

•           மாசடைந்த நீரை பருகுவதனாலும்இ மாசடைந்த நீர் சூழலில் காணப்படும் போதும் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மாசடைந்த நீரைப் பருகுவதனால் வாந்திபோதிஇ வயிற்றோட்டம்இ வயிற்றுளைவுஇ நெருப்புக் காய்ச்சல்இ தைபோயிட்டுக் காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் மாசடைந்த நீர் சூழலில் காணப்படுவதனால் மலேரியாஇ டெங்குஇ யானைக்கால்இ மஞ்சட்காய்ச்சல்இ தைவசுக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

•           நீர் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். நீரில் இரசாயண மாசுக்கள் கலப்பதனாலும்இ நீர் வெப்பப்படுத்துவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதனால் அதனை உட்கொள்ளும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன் அவற்றின் இனப்பெருக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வெப்பப்படுத்திய நீர் நீர்த்தொகுதியுடன் கலப்பதால் உயிரினங்கள் இறப்பதுடன்இ குடம்பிநிலையிலுள்ள பெரும்பாலான நீர்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிவடைகின்றன.

•           ஒரு பிரதேசத்தில் மாசடைந்த நீர் காணப்படுகின்றபோது அப்பிரதேச குடிநீர் வளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சில பிரதேசங்களில் மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற வளமாகவே நீர்நிலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆறுகள்இ குளங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மாசடைகின்றபோது அப்பகுதி மக்களின் நீர்வளம் மாசடைகின்றது. சில இடங்களில் மலசலக்கூடகுளிகள் அருகருகெ அமைந்திருப்பதனால் நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற வகையில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இலங்கையின் பொரும்பாலான நகரங்களில் அதுவும் மட்டக்களப்பில் காத்தான்குடிப் பிரதேசத்தில் இவ்வாறு பொருத்தமற்றதாக கிணறுகளில் குடிநீர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

•           பயிர்விளைச்சலிலும் நீர்ப்பாசண நடவடிக்கைகளிலும் நீர் மாசடைதலானது பாதிப்பபை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக நீர் உவர்த்தன்மை அடைவதனால் நீரானது பயிர்விளைச்சலைக் கட்டுப்படுத்தும் அத்துடன் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். யாழ்ப்பாணப் பகுதியில் அதிகளவில் கிணற்றுவழி நீர்ப்பாசணத்திற்காக தரைக்கீழ் நீர் பயன்படுத்தப்பட்டதனால் தற்போது சில பகுதிகளில் நீரின் உவர்த்தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக இது கிணற்றுவழி நீர்ப்பாசணத்தில் இனவரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்;. இதனால் இவ்வாறு நீர்ப்பாசண நடவடிக்கையை நம்பி மேற்கொள்ளப்படுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

•           உணவுற்பத்தி நிறுவனங்களுக்கு மாசடைந்த நீரினால் பெருமளவில் செலவு ஏற்படும். நீரின் துணையுடன் உணவுற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் சில நிறுவனங்களுக்கு இவ்வாறு பாதிப்புகள் எற்படும். குறிப்பாக இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள்இ குடிபாணங்கள் தயாரிக்கம் நிறுவனங்கள்இ கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இவை தமது பொருட்களைச் சுத்ததப்படுத்துவதற்கும்இ கலவையாக பயன்படுத்துவதற்கும் நீரினைப் பயன்படுத்துகின்றன. இதற்கு சுத்தமான நீர் கிடைக்காதபோது சுத்தமாக்கி நீரைப் பயன்படுத்துவதற்கரிய இயந்திரங்களை அதிக செலவில் கொள்வனவு செய்யவேண்டி ஏற்படும்.


3)                  நீர் மாசடைதலைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள்:-

•           நீர் நிலைகள் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்காக தகுந்த நீர்த்தேக்க முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.

•           தகுந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்தையும் கழிவு நீர் அகற்றும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்துதல்.

•           அதிக மாசடைவை உண்டு பண்ணும் கைத்தொழில்களை கட்டுப்படுத்தவதுடன்இ அதற்கு மாற்றுவழிகளை சிறப்பாக நீர் சுத்திகரிக்கும் தொகுதிகளைக் கொண்டதாக அமைத்தல்.

•           விவசாயத்தில் இரசாயண உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அண்மைக்கால்ததில் விருத்தியடைந்துள்ள உயிரியல் தொழில்நுட்பத்துடனான உள்ளீடுகளையும்இ சேதனப் பசளைகளையும் பயன்படுத்துதல்.

•           நகர மற்றும் மக்கள் குடியிருப்புகள் அடர்த்தியாயுள்ள பிரதேசங்களில் முறையான மலசலக்கழிவு வெளியேற்றத்திற்கான பாதாளக் குழாய்களை அமைத்தல்.

•           நீர்பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துதலும் தண்டனை வழங்குதலும்.

•           நீர்வளத்தின் முக்கியத்தவம்இ அது மாசடையும் வழிமுறைகள்இ அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்.

•           சர்வதேச நீர் தினத்தன்று (மார்ச் 22) விழிப்பணர்வு திட்டங்களை முன்னெடுத்தல்.


4)                  இலங்கையில் நீர் மாசடைதல்:-

•           சில தசாப்தங்களுக்கு முன் எமது நாட்டிலுள்ள மேற்பரப்பு நீர்இ மற்றும் தரைகீழ் நீர் மனிதநடவடிக்கைகளுக்கு முழுமையாக பயன்படுத்த முடியுமாக இருந்தது. ஆனால் தற்போது ஆறுஇ நீர் நிலைகள்இ குளம்இ திறந்த நீர் ஊற்றுக்களில் காணப்படும் நீரை பயன்படுத்த முடியாதுள்ளது. நீர் மாசடைவு காரணமாக நீர் அசுத்தமாவதை போன்றே நீரின் தரமும் குறைகின்றது. இயற்கையாக  நீரின் தரம் குறைவடைதல்இ மனித நடவடிக்கை காரணமாக நீர் மாசடைதல் ஆகியன இலங்கையில் நீர் மாசடையும் பிரதான காரணகளாகவுள்ளன.

5)            இலங்கையில் நீர் மாசடையும் வழிமுறைகள்:-

•           கடல்நீர் கலத்தல் - கரையோரப் பிரதேசங்களில் ஆழமற்ற கிணறுகளின் மூலம் நன்னீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. மழைவீழ்ச்சி குறைவாகக் காணப்படும் காலங்களில் தரைகீழ் நீர்மட்டம் கீழ் இறங்குவதன் காரணமாக உவர் நீர் அவற்றுக்குள் ஊடுருவுகின்றன. புத்தளம்இ கற்பிட்டிப் பகுதிகளில்  ஆழமற்ற கிணறுகளுக்குள் உவர் நீர் கலப்பது இதற்கு உதாரணமாகும்.

•           கழிவுகள் கலத்தல்:- இயற்கையான முறையில் பல்வேறு கழிவுப் பொருட்கள் நீருடன் கலப்பதனாலும் நீர் மாசடைகின்றது. நீரானது மேற்பரப்பு நீராகவும்இ தரைக்கீழ் நீராகவும் வழிந்தோடும்போது விலங்குக் கழிவுகள்இ நுண்ணங்கிகள்இ கனியுப்புக்கள் போன்றன நீருடன் கலந்து மாசடைய வைக்கின்றன.

•           விவசாய நடவடிக்கைகள் மூலம் கிருமிநாசினிஇ களைநாசினிஇ வளமாக்கிகளின் பயன்பாட்டினால் நீர் மாசடைதல்.

•           தூய்மையற்ற வாயு வகைகள் நீரில் கலத்தல். (வாகனப் புகைஇ கைத்தொழிற்சாலைகளின் புகைகள்)

•           கைத்தொழில் கழிவுப்பொருட்கள்

•           இரசாயன கழிவுப் பொருட்கள்

•           வீட்டுக் கழிவுகள் சேருதல்

•           ஆற்று மண் அகழ்தல்

•           களிமண் எடுத்தல்


6)                  இலங்கையில் நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்:-

•           தற்போதைய உலக சனத்தொகையில் 33மூ ஆனோர் அடிப்படைத் தேவைகளுக்குத் தூயநீரைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். 2025 ஆம் ஆண்டளவில் 60 வீதமானோர் நீரைப்பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வர்.

•           எமது நாட்டில் குடிநீர் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாறிவருகிறது. அதிகமான பிரதேசங்களில் மேற்பரப்பு நீரையும் தரைக்கீழ் நீரையும் குடிப்பதற்குப் பயன்படுத்தமுடியாதுள்ளது. (உதாரணம்- யாழ்ப்பாணம்இ அனுராதபுரம்)

•           கழிவுப் பொருட்கள் நீரில் கலப்பதனால் நீர்வாழ் உயிரினங்கள்இ செடி கொடிகள் பாதிப்புக்குஉள்ளாகின்றன.

•           களனி கங்கையில் மணல் அகழ்வதன் காரணமாக ஆற்றுப்படுக்கை ஆழமாகின்றது. இதனால் வறண்ட காலங்களில் அம்பத்தளை நீர் வடிகால் தேக்கம் வரை கடல் நீர் உள்வருகின்றது. இதனால் பாரிய கொழும்புப் பிரதேசங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்புக்குள்ளாகின்றது.


7)         இலங்கையின் நீர்வளப்பாதுகாப்பு:-

•           நீர் வளப்  பாதுகாப்பு நடவடிக்கைகள் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.     1.நீரினை அநாவசியமாக பயன்படுத்தாதிருத்தல் இ  2.நீரினை மாசுபடுத்தாதிருத்தல்.  நீர் வள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

•           வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தும் நீரினைப் பாதுகாத்தல்.

•           குளித்தல்இ பிடவை கழுவுதல்இ  மலசல கூடத்திற்காக பயன்படுத்தும் நீரினை வீணாகப் பயன்படுத்தாது இருத்தல்.

•           பயன்படுத்தும் நீரினை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீளவும் பயன்படுத்தல்.

•           விவசாய நடவடிக்கைகளில் சரியான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.

•           பயிரிடப்படும் பயிர்களின் வகைகளுக்கேற்பஇ தேவையான நீரினை மட்டும் பயன்படுத்தல்.

•           கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தும் நீரினை வீணாக்காது பயன்படுத்தல்.

•           நீர் மாசடைதலை தடுப்பதும் நீர்வளப்பாதுகாப்பில் முக்கியம் பெறுகிறது.

•           நகர் பிரதேசங்களில்இ வாகனம்இ புடவைகளைச் சுத்தப்படுத்தும் நிலையங்களில்நிகழும் நீர் மாசடைதலை தடுத்தல்.

•           விவசாயம்இ கைத்தொழில்களில் நிகழும் நீர் மாசடைதலை தடுத்தல்.

•           மழைநீர் சேகரித்தலை மேம்படுத்தல் - இலங்கையில் உலர் வலயப் பிரதேசங்களில்  நீர் சேகரிக்கக் கூடிய தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இத்தகைய முறைகளை அதிகரித்து மழைநீரினைச் சேகரிப்பதை மேம்படுத்தலாம்.


8)         நீர்வளப் பாதுகாப்பின் எதிர்கால நோக்கு:-

•           அதிக சனத்தொகை வசிக்கும் ஆசியநாடுகளில் நீர் மாசடைதல் ஒரு பொதுப் பிரச்சினையாகவுள்ளது.  உதாரணம் : இந்தியாஇ மலேசியாஇ இந்தோனேசியாஇ சிங்கப்பூர். இந்நாடுகளில் ஆற்றுப்படுக்கைகளைப் பாதுகாக்கும் செயற்றிட்டங்களின் மூலம் தரைமேல் நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. உதாரணம் : 1977 இல் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடத்தில் முடிவுற்ற சிங்கப்பூர் ஆற்று மற்றும் கலாத் நீர்ப்படுக்கை தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்.

•           இந்தியாவில் கங்கை ஆற்றைச் சார்ந்த ஆற்றுத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்.

•           இலங்கையின் மேற்பரப்பு நீர்இ தரைக்கீழ் நீர் வளத்தைப் பாதுகாக்கும் செயற்றிட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படுல் வேண்டும்.




2012-ல் உலகை உலுக்கிய சம்பவங்கள்

    2012-ல் உலகை உலுக்கிய சம்பவங்கள்
2012-இந்த வருடத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆம் வரலாற்றின் மிக முக்கியமான இடத்தில் 2012 இருக்கும் என்றால் அதில் ஜயமில்லை. இந்த ஆண்டில் உலகம் சந்தித்த சாதனைகளும்இ சர்ச்சைகளும்இ சவால்களும் மிகவும் ஏராளம். 2012 என்றதுமே உலக மக்கள் அனைவரின் மனதிலும் உதித்த எண்ணம் 21.12.2012 அன்று உலகம் அழிந்துவிடும் என்பதுவே.
ஒரு பக்கம் அறிவியல் ரீதியான சான்றுகளும்இ நாசாவின் தகவல்களும் மறுபக்கம் உலக முடிவைக் காட்டும் மாயன் காலெண்டர் என மக்களை சற்று புரட்டித்தான் போட்டன. மிகுந்த சர்ச்சையையும்இ பயத்தையும் ஏற்படுத்திய விடயம் என்றே சொல்லலாம்.
இதுதவிர சிரியாஇ ஈரான் இரகசியமான அணு ஆயுதத்தை தயாரிப்பதுஇ அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்இ புயல்- சூறாவளிஇ பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரம்இ தென் சீன கடல் விவகாரம்இ எல்லை பிரச்னைஇ ஆப்கான்- ஈரான்- பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் என அனைத்துமே உலகை அச்சுறுத்தி கொண்டு இருந்தன. எனினும் இதற்கு மத்தியிலும் பல்வேறு சாதனைகளும்இ விஞ்ஞான ரீதியாகஇ தொழில்நுட்ப ரீதியாக மனிதர்கள் அதி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தனர் என்றால் அது மிகையல்ல.
ஜனவரி 18 - வீக்கிபீடியா வேலைநிறுத்தம்
இன்றைய நவீன உலகில் எந்த தகவல்களையும்இ எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் என்ற அளவுக்கு முன்னேறி வந்துள்ளோம். இதே நேரத்தில் இணையத்தில் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக தகவல் களஞ்சியமான விக்கிபீடியாஇ ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டது.
.
வீக்கிபீடியா இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்
ஜனவரி 26 - பூமியை தாக்கிய சூரியப்புயல்
உலக அழிவை நினைவூட்டும் விதமாக 2012ம் ஆண்டில் பல்வேறு அரிய கிரகணங்களும்இ சூரியப் புயல்களும் பூமியை தாக்கின. குறிப்பாக ஜனவரி மாதமே பூமியின் வடமுனையை சூரியப் புயல் தாக்கி மக்களை அச்சுறுத்தியது. இதனால் வானில் பிரகாசமான ஒளி தோன்றியதுடன்இ அயர்லாந்துஇ இங்கிலாந்துஇ ஸ்காட்லாந்து மற்றும் நோர்வே போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது. இதேபோன்று மார்ச் மாதம் 8ம் திகதியும் மற்றொரு சூரியப்புயல் பூமியை தாக்கியது. இதனால் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
1. பூமியின் வடமுனையை தாக்கியது சூரியப் புயல்: வானில் பிரகாசமான ஒளி தோன்றியது
2. பூமியை தாக்கியது சூரியப் புயல் (வீடியோ இணைப்பு)
பெப்ரவரி 12 - இசை உலகின் தங்க பெண் மரணம்
பிரபல பொப் இசை பாடகியும்இ ரசிகர்களால் செல்லமாக இசை உலகின் தங்க பெண் என்றும் அழைக்கப்பட்ட ஒய்ட்னி ஹோஸ்டன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில்இ போதைப் பொருளை அதிகளவு உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது. இருப்பினும் இவரது மரணம் ரசிகர்கள் மட்டுமல்லாதுஇ இசைத்துறைக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல பொப் பாடகி ஹூஸ்டனின் இறுதிச்சடங்கு
மார்ச் 04 - ரஷ்யா ஜனாதிபதி தேர்தல்
ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தல்இ விளாடிமிர் புடின் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஜனாதிபதியானார். இத்தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பெற்றுஇ புடின் அபார வெற்றி பெற்றார். எனினும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறிஇ எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் செர்ஜி உள்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுஇ பின் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: புதின் அபார வெற்றி
ஏப்ரல் 01 - மியான்மர் நாடாளுமன்ற தேர்தல்
2012ஆம் ஆண்டில் மியான்மர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முக்கிய இடத்தை பிடித்தது. ஏனெனில் 15 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தஇ ஜனநாயகப் போராட்டத் தலைவர் ஆங் சான் சூகி போட்டியிட்டார். இத்தேர்தலில் மக்களின் பேராதரவுடன் ஆங் சாங் சூகி அபார வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதன்பின் மியான்மரில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுடன்இ உலக நாடுகளும் மியான்மர் மீதான தடையை சற்று தளர்த்தின.
1. மியான்மர் இடைத்தேர்தல்: ஆங் சான் சூகி வெற்றி
2. ஆங் சாங் சூகி இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

ஏப்ரல் 15 - டைட்டானிக் 100வது நிறைவு தினம்
1514 பேரை பலி கொண்ட டைட்டானிக் கப்பல் மூழ்கிஇ 100 ஆண்டுகள் நிறைவடைந்தது அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக டைட்டானிக் கப்பல் விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்துஇ பயணிகள் கப்பல் ஒன்றில் சவுதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். இவர்கள் சரியாக அதிகாலை 2.20 மணிக்கு கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
டைட்டானிக் கப்பல் விபத்து: 100ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று அனுசரிப்பு

மே 07 - பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்
பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசியை தோற்கடித்துஇ பிராங்காய்ஸ் ஹோலண்டே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கடந்த 1995ஆம் ஆண்டிற்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி சார்பில் தெரிவான முதல் ஜனாதிபதி என்ற பெருமையை ஹோலண்டே பெற்றார்.
பிரான்சின் ஜனாதிபதியானார் ஹோலண்டே
யூன் 02 - எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு தண்டனை
எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக முபாரக் பதவி விலகினார். இதனையடுத்து இவர் மீது போராட்டம் நடந்த காலகட்டத்தில் 846 பேரை கொன்று குவித்தது உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டது. இதில் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர் தவிர மகன்கள் அலாஇ கமால் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 அதிகாரிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
846 பேரை கொன்ற வழக்கு: எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை
யூன் 05 - ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டம்
இந்த ஆண்டில் பிரிட்டன் மட்டுமல்லாது உலகளவில் பெரும்பாலான மக்களின் கொண்டாட்டமாக இருந்தது ராணி எலிசபெத்தின் வைர விழா தான். பிரிட்டன் ராணி எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டுஇ வைர விழா நிகழ்வுகள் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்தன. இவ்விழாவின் ஒரு பகுதியாக பிக் பென் கோபுரத்தின் பெயர் எலிசபெத் கோபுரமாக மாற்றப்பட்டது. மேலும் இளவரச தம்பதிகளான வில்லியம்- கேத் மிடில்டன் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
1. ராணியின் வைரவிழா கொண்டாட்டம்: தேம்ஸ் நதிக்கரையில் படகுச்சவாரி
2. பிரிட்டனில் ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் தொடங்கியது
ஓகஸ்ட் 06 - நாசாவின் கியூரியாசிட்டி
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காகஇ நாசாவால் அனுப்பப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் 8 மாத பயணத்திற்கு பின்னர்இ வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதன்பின் அங்குள்ள பாறைகளையும்இ மண்ணையும் ஆய்வு செய்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இப்படங்களின் மூலம் நாசா விஞ்ஞானிகளுக்கு செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.
1. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி: முதல் படத்தை எடுத்து அனுப்பியது
2. செவ்வாய் கிரகத்தில் மனிதக்குரல்: கியூரியாசிட்டி சாதனை
ஓகஸ்ட் 15 - அசாஞ்ச் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம்
அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இராணுவ இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அசாஞ்ச். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த போதிலும்இ சுவீடனில் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இவரை கைது செய்யும் படி சுவீடன் அரசு உத்தரவிடவேஇ பிரிட்டன் பொலிசார் அசாஞ்சை கைது செய்ய முயன்றனர். கைதிலிருந்து தப்பிக்கஇ லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அதன்பின் ஈக்வடார் அரசும் இவருக்கு தஞ்சமளிக்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.
1. அசாஞ்சை கைது செய்வது தற்கொலைக்கு சமம்: ஈக்வடார் ஜனாதிபதி
2. தேர்தலில் போட்டியிட விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் முடிவு

ஓகஸ்ட் 26 - நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.
நிலவில் முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்(வீடியோ இணைப்பு)
ஒக்ரோபர் 09 - மலாலா துப்பாக்கி சூடு
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காகவும்இ தலிபான்களுக்கு எதிராகவும் போராடிய மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மிக மோசமான நிலையில் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்ட மலாலாவுக்குஇ லண்டனில் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இச்சிறுமியின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய்இ ஐ.நா சபையின் சர்வதேச கல்விக்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மலாலா தலிபான்களுக்கு எதிராக பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இன்று மலாலா நாள்: ஐ.நா கௌரவிப்பு(வீடியோ இணைப்பு)
ஒக்ரோபர் 29 - சாண்டி புயலின் கோரத் தாண்டவம்
வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் சேதத்தை ஏற்படுத்தியது சான்டி புயல். இப்புயலால் 5 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்இ 12 மாகாணங்கள் முழுமையாக சேதமடைந்தது. இதனால் 13 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதுடன்இ நியூயார்க்இ நியூஜெர்ஸி மாகாணங்கள் உட்பட 8 இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவை புரட்டி போட்ட சான்டி புயல்: மீட்பு பணிகள் தொடக்கம்
நவம்பர் 06 - அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்
2012ஆம் ஆண்டு முழுவதுமே அமெரிக்கா மக்கள் முணுமுணுத்த விடயம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்? என்பது தான். இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும்இ குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கியதுடன்இ பல்வேறு சலுகைகளையும் மக்களுக்கு அறிவித்தனர். முடிவில் 303 வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார் பராக் ஒபாமா.
வாக்களித்த மக்களுக்கு நன்றி: ஒபாமாவின் வெற்றி உரை (வீடியோ இணைப்பு)
நவம்பர் 18 -யாசர் அரபாத் மரணத்தில் சர்ச்சை
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்இ பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தார். இதனையடுத்து இவரது உடைகளை ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள்இ பொலோனியம் விஷம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இவரது கல்லறை உடைக்கப்பட்டது.
இன்று யாசர் அராபத்தின் கல்லறை உடைப்பு
நவம்பர் 30 - பாலஸ்தீனத்திற்கு அந்தஸ்து
ஐ.நாவில் முதன் முறையாக உறுப்பினர் அல்லாத கண்காணிப்பாளர் அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் இத்தீர்மானத்தை அமெரிக்காஇ இஸ்ரேல்இ ஜேர்மனி உட்பட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன்இ இஸ்ரேல் எல்லைப்பகுதியில் 3000 வீடுகளை கட்ட தீர்மானித்தது. இஸ்ரேலின் இத்திட்டத்திற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
1. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நாவில் வாக்கெடுப்பு: அமெரிக்காஇ ஜேர்மனி எதிர்ப்பு
2. பாலஸ்தீனத்திற்கு எதிராக 3000 வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்: அமெரிக்கா கடும் கண்டனம்
டிசெம்பர் 04 - இளவரசி கேட் கர்ப்பம்
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமானது பிரிட்டன் மக்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. குறிப்பாக சூதாட்டக்காரர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது என்றே சொல்லலாம். உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. மகிழ்ச்சியான தருணத்திற்கு மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திய விடயம்இ கேட் மிடில்டன் கர்ப்பதிற்காக சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஜெஸிந்தா மர்மமான முறையில் இறந்தது தான்.
1. இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பம்: அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது
2. செவிலியர் மரணம்: கண்ணீருடன் வருத்தம் தெரிவித்த அறிவிப்பாளர்கள்

டிசம்பர் 14 - அமெரிக்க படுகொலை
அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில்இ 20 வயது மதிக்கத்தக்க நபர் ஆடம் லான்சா நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அமெரிக்காவில் உள்ள துப்பாக்கி சட்டத்திற்கு எதிராக பெரும் கண்டனங்களும் எழுந்தன.
1. அமெரிக்காவில் பயங்கரம்: 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி (வீடியோ இணைப்பு)
நாட்டை உருகுலைக்கும் முடிவில்லா பிரச்சனை - சிரியா
2012-ல் மிக முக்கியமாக துனிஷியாவில் தொடங்கிய அரபு நாடுகளின் போராட்டம் எகிப்துஇ பஹ்ரைன்இ லிபியா என ஆரம்பித்து சிரியா வரை சென்றது. சிரியா ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக மக்கள் கடந்த 21 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க சிரியா அரசு நடத்திய தாக்குதல்களில் இதுவரையிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன்இ லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
குறிப்பாக சிரியா அரசு பொதுமக்கள் மீது இரசாயன குண்டுகளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இரத்தம் என்ற நிலையே சிரியாவில் உள்ளது. குறிப்பாக ஒன்றுமே அறிந்திராத பச்சிளம் குழந்தைகளையும்இ அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தான் தாக்குதல்கள் நிகழ்கின்றன.
இவர்கள் தவிர செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கும் இதே கதிதான். சிரியாவில் மட்டும் இந்த ஆண்டு 36 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tuesday, March 19, 2013

வெப்பமடையும் பூமி



வெப்பமடையும் பூமி!

பூமியில் நாம் வாழ்வது என்பது சூரிய வெளிச்சம், நிலம், நீர், வான்வெளி போன்றவற்றின் உதவியுடன்தான் நடைபெறுகிறது. தற்பொழுது சுற்றுப்புறச் சூழலிலும், சூழலியல் சமன்பாட்டிலும் மிகுதியான பாதிப்-புகள் ஏற்பட்டு வருவதால் நம் வாழ்க்கை-யானது அச்சுறுத்தப்படுகின்றது. இப்பாதிப்புகள், வளர்ந்து வரும் மக்கட்தொகை, உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பக்கவிளைவுகளாகும்.
வளி மண்டலம்
வளிமண்டலம் என்பது ஆக்சிஜன், நீர், கார்பன்டை_ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் அடங்கிய மண்டலமாகும். எஞ்சியுள்ள வாயுக்கள் பூமியை, சூரியனிலிருந்து வரும் அபாயகரமான கதிர்வீச்சுகளிலிருந்து காப்பதோடு மட்டுமல்லாமல், வளி மண்டலத்தின் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. வளிமண்டலம் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ளும் தன்மையை, பசுமை இல்ல விளைவு என அழைக்கிறோம். இப்பசுமை இல்ல விளைவுக்குக் காரணமான வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல வாயுக்களான கார்-பன்_டை_ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், குளோரோ, ஃபுளோரோ கார்பன் மற்றும் அதிக அளவிலான நீராவி போன்றவையாகும்.
தொழில்மயமாக்கம், வேளாண்மை விரிவாக்கம் மற்றும் மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றால் வளி-மண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்கள் சராசரி அளவுகளிலிருந்து மாறுபட்டு வேகமாக அதிகரித்துள்ளது. இது உலகம் அதிக வெப்பமடைவதை நோக்கி இட்டுச் செல்கிறது.
விரைவில் நீர்த்துப் போகக்கூடிய புதைபடிவ எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவற்றை எரிப்பதனாலும், மேலும் மரங்களை வெட்டி எரிப்பதனாலும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளிவருகின்றன. பசுமை இல்ல விளை-வுக்கு 70 சதவிகிதம் கார்பன்_டை_-ஆக்ஸைடு காரணமாகிறது. சாண எரிவாயுத் தொட்டிகளிலிருந்து மீத்தேன் உற்பத்தியாகிறது. விவசாய நிலங்களின் நீர் நிறைந்த நெல் வயல்களில் போடப்படும் நைட்ரஜன் தொடர்-புடைய உரங்கள் மூலம் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியாகிறது.

இப்பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ச்சியாக இதேவேகத்தில் வெளியேறுமானால், கி.பி. 2030இல் பூமியின் வெப்பமானது 3 டிகிரி சென்டி கிரேட் அதிகரிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்-ளார்கள். உயரும் வெப்ப நிலை மாற்றத்தால் கடல்கள் சூடேறுகின்றன. பனிப் பாறைகள் உருகத் தொடங்கு-கின்றன. துருவப் பகுதியில் பனி மலை-களும் உருகிக் கடல் நீரின் அளவைப் பெரும் வெள்ள அபாயம் ஏற்பட வழி வகுக்கிறது. உலகின் பல பகுதிகளில் கடலரிப்பை ஏற்படுத்துகிறது.
1993 ஜனவரி முதல் வாரத்தில் மாலத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவு கடல்நீரால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது. ஒரு சிறு மாற்றம் கடல் மட்ட அளவில் ஏற்பட்டால்கூட பல தீவுகள் எளிதில் அழியும் என்று இதிலிருந்து நாம் அறிய முடியும். மேலும், மாலத்தீவுகளில் உள்ள அதிக உயரமான நிலப்பரப்பானது கடல் மட்டத்தைவிட 2 மீட்டர் அளவு உயரத்தில் உள்ளது.
அமில மழை: புதை படிவ எரி-பொருள்கள் எரிவதனால் கந்தக மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் உண்-டாகின்றன. இந்த மாசுக்கள் வளி-மண்டலத்தில் உள்ள நிராவியுடன் வினைபுரிந்து கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தை உண்டாக்கு-கின்றன. இது அமில மழையாகவும், பனியாகவும் பெய்கிறது. அமில மழையானது ஏரிகள், காடுகள், காட்டு விலங்குகள், விவசாய நிலப்பகுதிகள், குடிநீர்ப் பகுதிகள் மற்றும் மனித உடல்நலத்திற்கும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஓசோன் படலம் மெலிவடைதல்: ஓசோன் படலம் பூமியின் மேற்பரப்பி-லிருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. ஓசோன் என்பது 3 ஆச்சிஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்ததாகும். சூரியனிலிருந்து வரும் அபாயகரமான புற ஊதாக்கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் நம்மை ஓசோன் படலம் பாதுகாக்கின்றது. இப்படலம் பல மாசுக்களினால் அழிக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ ஃபுளோரோ கார்பன் என்ற வேதிப்பொருளைக் கூறலாம். ஒரு குளோரோ ஃபுளோரோ கார்பன் மூலக்கூறு 1 லட்சம் ஓசோன் மூலக்-கூறுகளை அழிக்க வல்லது. குளோரோ ஃபுளோரோ கார்பன் இயற்கையாகக் கிடைப்பதில்லை. மாறாக, செயற்-கையாகத்தான் தயாரிக்கப்படுகிறது. குளிர்பதனப் பெட்டிகள், குளிர்விக்கும் பெட்டிகள், தீயணைப்புப் பெட்டிகள் போன்றவற்றிலும், ஏரோசால் டின்களில் முன்செலுத்தியாகவும், பிளாஸ்டிக் பொருளாகவும், மின்னணுத் தொழிற் சாலைகளில் கரைப்பானாகவும் குளோரோ ஃபுளோரோ கார்பன் பயன்படுத்தப்படுகிறது.
ஓசோன் படலம் மெலிவடைவதால், புற ஊதாக் கதிர்களின் வீச்சுகள் எளிதாகவும், வேகமாகவும் நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனையும் குறைக்கிறது. மனித உடலில் நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இது மீன் வளத்தையும், விவசாய விளைச் சலையும் குறைக்கும்.
புகை மூட்டம்: காற்று மாசுபடுவ தற்குத் தொழிற் சாலைகளிலிருந்தும், மின் நிலையங்களிலிருந்தும், போக்கு-வரத்து வாகனங்களிலிருந்தும் வெளி-வரும் புகையே முக்கியக் காரணமாகும். இப்புகையானது புதை படிவ எரி-பொருள்களை எரிப்பதனால் வெளி-வருகிறது. புகை மூட்டம் எனப்படுவது பின்னர் மூடுபனியுடன் புகை கலந்த கலவையாகிறது. இது சாதரணமாக, பனிக் காலத்தில் அதிகக் தொழிற்-சாலைகள் உள்ள பகுதியிலும், போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளிலும் காணப்படுகிறது. இப்புகைமூட்டமானது அதிகமான அளவில், நச்சுத் தன்மை கொண்ட உட்பொருளான ஓசோனைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கார்பன்_டை_-ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, மீத்தேன், குளோரோ ஃபுளோரோ கார்பன் மற்றும் பல வாயுக்கள், ஆச்சிஜன் மூலக்கூறு ஒன்றுடன், ஒரு ஆக்சிஜன் அணுவை வேதிவினை புரியவைக்கும் வினையூக்கியாகச் செயல்பட்டு வளிமண்டலத்தின் கீழுள்ள அடுக்குகளில் இவ்வினையி-லிருந்து ஓசோன் உற்பத்தியாகிறது. வளிமண்டலத்தின் மேலுள்ள அடுக்-குகளில் இம்மாசுக்கள் ஓசோன் படலத்தை அழிக்க உதவி செய்கின்றன. இப்புகை மூட்டம் அதிகரிப்பதால் சுவாசித்தல் சம்பந்தமான நோய்களும், கண் எரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சலும் அதிகமாகின்றன. மரங்கள் மற்றும் உணவுப் பயிர்கள் பாதிக்கப்-படுவதற்குப் புகை மூட்டம் முக்கியக் காரணமாக விளங்குகிறது. பகுதிப் பொருள்கள்: தூசி மற்றும் சிறிய துகள்கள் போன்றவையே பகுதிப் பொருள்களாகும். இவை வளி-மண்டலத்தில் கலந்து தம் பங்கிற்குக் காற்றை மாசுபடுத்துகின்றன. இப்-பொருள்கள் சுவாசித்தல் சம்பந்த-மான பிரச்சினைகளைத் தோற்று-விக்கின்றன. இப்பகுதிப் பொருள்கள் இலைகளின் மேற்புறத்தில் படிந்து தாவரங்களின் ஒளிச்சேர்க்கையிலும் பாதிப்பை உண்டாக்குகின்றன. புவி வெப்ப-மடைவதால், நமது உடலுக்கு, நமது உணவுப் பாதுகாப்பையும், உல-கின் பிற உயிரினங்களுக்கும் தாவரங்-களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, நமது புவியைக் காக்க, நாம் புவி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டு