Monday, March 11, 2013

இலங்கையின் காலநிலை மாற்றங்கள்

இலங்கையின் காலநிலை மாற்றங்கள்

கலாநிதி. பீ.ஆர்.எஸ்.பீ. பஸ்நாயக்க
அறிமுகம்
காலநிலை மாற்றமானது, நீண்ட காலம் தொட்டு (சாதாரணமாக பல தசாப்பங்கள் அல்லது அதை விடவும் கூடுதலான காலம்) காலநிலையின் பொதுவான நிலையான தன்மையில் அல்லது அதில் மாற்றத்தில் புள்ளிவிபர ரீதியிலான முக்கிய மாற்றங்கள் எனப் பொருள்படும். காலநிலை மாற்றங்கள் இடம்பெறுவதற்கு இயற்கையான உள் செயற்பாடுகள் காரணமாக அல்லது வெளித் தாக்கங்கள் காரணமாக அல்லது வளிமண்டலத்தில் மனிதர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற மாற்றங்கள் அல்லது பூமியை பயன்படுத்துவதில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்பன மூலம் இடம்பெறலாம். (IPCC, 2001)
கைத்தொழில் புரட்சியின் பின்னர் அதிக எரிபொருள் பாவனை மற்றும் பூமியின் பயன்பாட்டுச் செயற்பாடுகளின் மாற்றங்கள் (முக்கியமாக ஏற்படுகின்ற மாற்றங்கள்), கைத்தொழில்களில் இருந்து நச்சு வாயுக்களை வெளியிடல் போன்ற மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக மிகவும் துரிதமாக காலநிலை மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. துரிதமாக அதிகரித்து வருகின்ற பச்சை வீட்டு விளைவின் காரணமாகவும் வளிமண்டலத்தில் பூகோள வெப்ப நிலையானது அதிகரித்துள்ளது. பச்சை வீட்டு விளைவின் காரணமாக பூமியின் மேற்பரப்பிலே பூகோள வெப்ப நிலையானது சாதாரண நிலையிலும் பார்க்க (அதாவது 19 0C இற்குப் பதிலாக சராசரி மேற்பரப்பு வெப்ப நிலையானது 14 0C) 30 0C வரையில் வெப்பமடைவதுடன், இதன் மூலம் உயிரியல் தன்மைகள் அழிந்துவருகின்றன. இயற்கை வளிமண்டலத்தில் இவ்வாறு அதிகரித்து வருகின்ற பச்சை வீட்டு விளைவிற்கு காரணமாக அமைகின்ற வாயுக்களாக நீராவி(H2O), காபன்டயொக்சைட் (CO2), நைட்ரஸ் ஒக்சைட் (N2O), மீதேன் (CH4), ஓசோன் (O3), ஹைட்ரோபுளோரோ காபன் (HFC5), சல்பர் ஹெக்சாபுளோரைட் (SF6) மற்றும் பர்ப்புளோகாபன் (PFC5) என்பன காரணமாக அமைகின்றன. மனித வாழ்க்கையினை மிகவும் சுகபோகமாக அமைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற மனித செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையால் வளிமண்டலத்தில் CO2 செரிவானது கைத்தொழில் மயமாவதற்கு முற்பட்ட காலத்தில் 280 ppm இருந்து இன்று 365 ppm வரையில் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மழைவீழ்ச்சி மாற்றம்
1931 முதல் 1960 வரையிலான ஆண்டு (சந்திரபால 1997) காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 1961 முதல் 1990 வரையிலான காலப் பகுதியில் நடைமுறையில் காணப்பட்ட 234 மி.மி. முதல் 265 மி.மி. வரையில் அதிகரித்துவரும் இலங்கையின் வருடாந்த மழை வீழ்ச்சியானது 177 மி.மி. ஆல் அதாவது சுமார் 7% வீதத்தால் குறைந்துள்ளது. வடகீழ் பருவக்காற்று மழை வீழ்ச்சியானது 1931-1960 வரையிலான காலப் பகுதியின் நிலையிலிருந்து 1961-1990 வரையான காலப் பகுதி வரையில் அதிகரித்துவரும் வித்தியாசத்தால் குறைந்துள்ளது. தென்மேல் பருவக்காற்றானது இந்தக் காலப் பகுதியினுள் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தினைக் கொண்டிராத போதிலும் அடிக்கடி மாறும் தன்மையில் 1931 - 1960 வரையிலான காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 1961 – 1990 வரையிலான காலப் பகுதியில் குறைந்துள்ளது. ஏனைய காலநிலை அவதான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய காலநிலை அவதான நிலையங்களில் இருந்து அண்மைக் காலத்தில் வருடாந்த மழை வீழ்ச்சியிலே குறிப்பிடத்தக்களவு உயர் மாறுபடும் தன்மையொன்று பதிவாகியுள்ளது. (வரைபடம் 01) கடந்த நூற்றாண்டு காலப் பகுதியினுள் வருடாந்த மழை வீழ்ச்சியில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஒன்றினைக் காணக்கூடியதாக இல்லை. வளிமண்டலத்தின் பச்சை வீட்டு விளைவானது அதிகரித்தமையால் பூகோள காலநிலை மாற்றம் இடம்பெறுகின்றமை மழை வீழ்ச்சி முறைமைகளில் பரந்தளவில் மாற்றடைவதற்குக் காரணமாக அமையலாம்.
வெப்பநிலை மாற்றம்
இலங்கையிலே வளிமண்டலத்தின் வருடாந்த சராசரி வெப்ப நிலை மாற்றமானது கடந்த சில தசாப்தங்களாக குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினைக் காட்டி நிற்கின்றது. (பஸ்நாயக்க உட்பட மேலும் சிலர் 2012) 1961 - 1990 வரையிலான கால கட்டத்தில் சராசரி வளிமண்டல வெப்ப நிலையின் அதிகரிப்பு வேகமானது வருடாந்தம் 0.0160C முறையே அதிகரித்துள்ளது. (சந்திரபால 1996) பெரும்பாலும் அனைத்து காலநிலை அவதான நிலையங்களிலும் வளிமண்டலத்தின் சராசரி வெப்ப நிலை அதிகரிப்பில் முன்னேற்றம் ஒன்றினைக் காட்டியதுடன், ஆகக் கூடிய அதிகரிப்பு வேகமானது ஒரு வருட காலத்தில் 0.0210C வீதம் புத்தளத்தில் பதிவாகி இருந்தது. இரவு காலத்தில் வருடாந்த வளிமண்டல சராசரி வெப்பநிலையானது உயர் அளவில் அதிகரிப்பொன்றினைக் காட்டியுள்ளது. இரவு காலத்தில் ஆகக் குறைந்த வருடாந்த சராசரி வளிமண்டல வெப்பநிலையானது 0.020C நுவரெலியாவில் பதிவாகி இருந்தது.

கடந்த காலத்திலே நாட்டின் பொதுவான வெளி வெப்பநிலையானது அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாக இரவு காலத்தின் மிகக் குறைந்த வெப்ப நிலை பகல் நேர ஆகக் கூடிய வெப்ப நிலையிலும் பார்க்க அதிகரித்தமையே என்பது தெளிவாகின்றது. இந்த முன்னேற்றமானது கடந்த நூற்றாண்டு முழுவதும் பூகோள வெப்ப நிலை அதிகரிப்பிற்கு சமமானதாகும். இந்த அதிகரிப்பிற்கு பச்சை வீட்டு விளைவானது அரைப் பகுதி அளவில் தாக்கம் செலுத்தி உள்ளதுடன், அண்மைக் காலமாக இடம்பெற்ற துரித நகரமயமாக்கலின் விளைவாக அதிகரித்த பிராந்திய வெப்பநிலை அடுத்த காரணமாக அமையலாம்.
மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை பற்றிய ஆரம்பக் காலநிலை ஆய்வு
வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் (டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி) அதிக மறைவீழ்ச்சி மத்திய மலைநாட்டில், கிழக்குப் பள்ளத்தாக்குகளிற்கு எல்லைப் படுத்தப்படுவதுடன் உச்ச அளவான 1200 மி.மீ மலைவீழ்ச்சி மத்திய மலைநாட்டின் உச்சியிற்கு சற்றுக் கீPழுள்ள பிரதேசத்திற்குக் கிடைக்கிறது. (படம் 3). இதற்குக் காரணமாவது இந்தக் காலத்திற் அதிக ஈரப்பதனுடன் கூடிய வட கீழ்க் காற்றாகும். முதல் பருவக்காற்று மலை காணப்படும் மார்ச் ஏப்ரல் போன்ற மாதங்களில் நாட்டின் தென் மேல் பிரதேசங்களிற்கு கடுமையான மழை கிடைக்கும்.

இலங்கையின் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1931 இலிருந்து 1960 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 1961 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் 144 மி.மீற்றரால் அதாவது 7% இனால் குறைவடைந்துள்ளதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னடைவு 234 மி.மீற்றரிலிருந்து 263 மி.மீற்றர் வரை அதிகரித்துள்ளது. (சந்திரபால 1997) இலங்கையின் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சி மழை 1931 - 1960 வரையான காலப்பகுதியிலிருந்து 1961 – 1990 காலப்பகுதி வரை அதிகரிக்கும் மாற்றத்துடன் குறைந்துள்ளது. இந்த காலப்பகுதி இரண்டினுள்ளும் தென்மேல் பருவப் பெயர்ச்சி மறை தெளிவான வேறுபாடு ஒன்றைக் காட்டா விடினும் 1931 – 1960 காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 1961 - 1990 காலப்பகுதி மாற்றத்துடன் குறைந்துள்ளது. ஏனைய வானிலை மத்திய நிலையங்களுடன் ஒப்பிடும் போது மட்டக்களப்பு, குருனாகல் மற்றும் இரத்தினபுரி போன்ற காலநிலை மத்திய நிலையங்களில் அண்மைக் காலங்களில் உயர் மாற்றத்துடன் கூடிய வருடாந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. (படம் 1). கடந்த நூற்றாண்டு காலப்பகுதியில் வருடாந்த மழைவீழ்ச்சியில் குறிப்பிடக் கூடிய மாற்றம் ஒன்று நிகழ்ந்ததில்லை. சிலவேளை மழைவீழ்ச்சிப் போக்கில் உயர் மாற்றத்திற்குக் காரணம் வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரிப்பதனால் ஏற்படும் பூகோள காலநிலை மாற்றமாக இருக்கலாம்.
மழைவீழ்ச்சியின் எதிர்கால நிலைமை
பிரதானமாக மழைவீழ்ச்சியின் மாற்றத்தினால் காலநிலை மாற்றத்துடன் காலநிலை எல்லை கடந்த விளைவுகள் (வெள்ளப் பெருக்கு, வறட்சி போன்றன)  மிகவும் கொடூரமாக அடிக்கடி ஏற்படுகின்றன.  இதைத் தவிர காலநிலை மாற்றத்துடன்  ஈர் நிலங்கள் மென்மேலும் ஈரத்தன்மைக்கு உட்படுவதுடன் உலர் பிரதேசங்கள் மென்மேலும் வறண்டு போகின்றன.  பெற்றுக் கொண்ட பெறுபேறுகளிற்கு ஏற்ப நாட்டின் மேல் மற்றும் தென்மேல் பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்ட தென்மேல் பருவ மழை A2 நிலைமையின் கீழ் 2025 (6ம் படம்) 2050 (8ம் படம்) மற்றும் 2100 (10ம் படம்) ஆகும் போது அதிகரிப்பதாகத் தெரிகிறது.  படம் 5, 7 மற்றும் 9இன்    A2  இன் வெளிப்பாட்டுத் தன்மையின் கீழ் வேறு வேறாக 2025, 2050 மற்றும் 2100 போன்ற வருடங்களில் வடகீழ்ப் பருவ மழை நிலைமை காட்டப்படுவதுடன் அதனால் விசேடமாக கிழக்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் வடகீழ்ப் பருவ மழையின் அதிகரிப்பொன்றைக் காட்டுகிறது.
வெப்பநிலை பற்றிய எதிர்கால நிலைமை
பல்வேறுபட்ட வெளிப்பாட்டுத் தன்மையின் கீழ் (2001) 2100 ஆம் ஆண்டாகும் போது பூகோள சராசரி வெப்பநிலை 1.4 - 5.80C   என்ற எல்லையில் அதிகரித்துச் செல்லும் எனக் காட்டப்படுகிறது.  2100ஆம் ஆண்டு வடகீழ்ப் பருவக் காற்றுக் காலம் மற்றும் தென்மேல் பருவக் காற்றுக் காலத்தில் சராசரி வெப்பநிலை ஆரம்ப மட்டத்திலிருந்து படிப்படியாக 2.90C இலிருந்து 2.50C வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.  11ஆம் படத்திலிருந்து 16ஆம் படம் வரை 2025, 2050, 2100ஆம் ஆண்டு ஆகும் போது வடகீழ்ப் பருவக் காற்றுக் காலம் மற்றும் தென்மேல் பருவக் காற்றுக் காலத்தில் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதாகக் காட்டப்படுகிறது.
முடிவு
தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சி மழை A2 விவரணத்தின் கீழ் Haddcm B மாதிரியுடன் மழைவீழ்ச்சி அதிகரித்துச் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.  மழைவீழ்ச்சி அதிகரிப்புடன் கூடிய மழைவீழ்ச்சி எல்லைப்படுத்தப்பட்ட வான் வலயமும் விரிவாக்கம் பெறுவது உறுதி.  வடகீழ்ப் பருவப் பெயர்ச்சியை விட தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் மழைவீழ்ச்சி மாற்றம் அதிகமாகும்.  ஒவ்வொரு பருவப் பெயர்ச்சிக் காலத்திலும் மத்திய மலைநாட்டில் காற்றின் முகப்பில் அதிக அதிகரிப்பும், காற்றின் எதிர்த் திசையில் குறைந்த அதிகரிப்பும் காணப்படும்.  அதனால் எதிர்காலத்தில் சனத்தொகை அதிகரிப்பும் நீரிற்கான அதிக கேள்வியுடன் மத்திய மலை நாட்டில் விசேடமாகக் காற்றின் எதிர்த் திசைப் பிரதேசங்கள் மற்றும் அருகிலுள்ள மழைவீழ்ச்சி குறைந்த பிரதேசங்களிற்கு பருவ காலங்களில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.  A2  விவரணத்தின்படி வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயு அதிகரித்துச் செல்வதனால் சராசரி வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதால் இந்த நிலைமை இன்னும் மோசமாகும்.  இந்த நிலைமை விவசாயம், நீர்வளம் மற்றும் நிலப் பயன்பாட்டுத் துறைகளை நேரடியாகப் பாதிப்பதுடன் முன் சொன்னபடி காலநிலை மாற்றங்களிற்கு முகங் கொடுக்க வேண்டி விசேடமாக உலர் வலயங்களில் மழை நீரைப் பாதுகாத்தல், சிறிய குளங்களில் வண்டல் மண் அகற்றல் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும்.  
அதிகரித்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை நிலைமைகளை பாதுகாப்பற்ற துறைகளில் நிகழும் காலநிலை மாற்றங்களிற்கு முகங் கொடுக்க வேண்டிப் பிரச்சினை மற்றும் பாதுகாப்பற்ற தன்மை மதிப்பீட்டு அலகாக இசைவாக்கமடையும் தன்மைகளை முன்னேற்றும் நுட்ப முறைகளை உருவாக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்த முடியும்.   

இந்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை நிலைமைகள் 1 pcc  இனால் ஆலோசிக்கப்பட்ட கருதுகோள் ரீதியான வெளிப்பாடுகள் நிலைமைகளின் கீழ் அமைந்துள்ளது.  முன்பு பிரசுரிக்கப்பட்ட காலநிலை அழிவுகளிற்கு ஏற்ப எதிர்வரும் வருடங்களில் மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலைகளில் மத்திய வெளிப்பாட்டு நிலைமைகள் Head cmb மாதிரியுடன் பாவிக்கப்படுகிறது.  1 pcc மூலம் உத்தேசிக்கப்பட்ட வெளிப்பாட்டு நிலைமைகளுடன் இணைந்துள்ளதுடன் நம்பகமற்ற தன்மை ஏற்படும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமாகும்.
நன்றி
இலங்கை காலநிலை மாற்றங்களிற்கு இசைவுபடும் பிரச்சினைகளிற்கான மதிப்பீட்டிற்கு அடிப்படை உதவிகளைச் செய்த GEF/UNEP/TWAS (பிரதான இலக்கம் AS - 12) நிறுவனங்களிற்கு விசேட நன்றிகள்.

இலங்கையின் காலநிலை

இலங்கையின் காலநிலை

Climate
காலநிலை
யாதேனுமொரு இடத்தில் நீண்ட காலமாக (ஒரு மாதத்தில் இருந்து பல மில்லியன் ஆண்டு காலம் வரையில், எனினும் பொதுவாக 30 வருட காலம் வரையில்) வளிமண்டலத்தில் காணப்படும் நிலை காலநிலை என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. காலநிலை என்பது வலிமண்டலத்தின் மூலப்பொருட்கள் (மற்றும் அவற்றின் மாற்றங்கள்) அதாவது சூரியக் கதிர்கள், வெப்பநிலை, ஈரத்தன்மை, மேகம், மழைவீழ்ச்சி (விதம், தெளிவு, அளவு) வளிமண்டல அமுக்கம் மற்றும் காற்றின் (வேகம் மற்றும் வீசும் திசை) ஆகிய இவற்றின் சேர்மமாகும்.
மத்திய கோட்டிற்கு வட அகலாங்கு 50 55' முதல் 90 51' வரையிலான இடைவெளிக்குள் கிழக்கே நெட்டாங்கு 790 42' முதல் 810 53' இற்கும் இடைப்பட்ட இலங்கை அமைந்துள்ளதன் பிரகாரம் நாட்டின் காலநிலையானது மத்திய கோட்டு காலநிலை தன்மைகளைக் கொண்டுள்ளன.
புவியியல் தன்மைகள்
நாட்டின் தெற்குப் பிரதேசத்தின் மத்திய பகுதியில் 25 கி.மீ. விடவும் உயரமான மலைகளைக் கொண்ட பிரதேசமாகும். மத்திய மேட்டு நிலங்கள், மலைத் தொடர்கள், மலை உச்சிகள், மேற்தகடு போன்ற வித்தியாசமாக புவியியல் தன்மைகளைக் கொண்டுள்ளது. நாட்டின் மீதமுள்ளப் பிரதேசங்களைச் சேர்ந்த தாழ்நிலங்கள் இடையிடையே காணப்படுகின்ற சிறிய மலைகள் தவிர பொதுவாக சமவெளியாகவேக் காணப்படுகின்றன. முக்கியமாக பருவப்பேர்ச்சிக் காற்று காலங்களில் ஏற்படுகின்ற காற்றின் தன்மை, காலத்திற்குரிய மழை வீழ்ச்சி, வெப்பநிலை, ஒப்பீட்டளவிலான ஈரத்தன்மை மற்றும் ஏனைய காலநிலைத் தன்மைகளுக்கு இந்த புவியியல் தன்மையானது பெரிது தாக்கம் செலுத்துகின்றது.
மழைவீழ்ச்சி
இலங்கையின் மழைவீழ்ச்சியில் பல்லினத் தன்மையான காரணிகளின் செல்வாக்குக் காணப்படுகின்றன. வருடாந்த மழைவீழ்ச்சியில் அதிகமானவை பருவப்பெயர்ச்சிக் காற்று, வெப்பச் சலனம், சூறாவளி ஊடான மழைவீழ்ச்சியினைக் கொண்டுள்ளது. வருடாந்த நடுத்தர மழை வீழ்ச்சியானது மிகவும் வறண்ட பிரதேசங்களுக்கு (வட கிழக்கு மற்றும் தென் கிழக்கு) சுமார் 900 மி.மி. இற்குக் குறைவான அளவிலிருந்து மிகவும் ஈரப் பிரதேசங்களுக்கு (மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவு பிரதேசத்திற்கு 5000 மி.மி. இற்கும் அதிகமான அளவு வரையில் மாற்றம் அடையக் கூடிய பல்வேறு அளவினைக் கொண்டுள்ளது. (வரைபடம் 01)
Annual Rainfall in Sri Lanka
வரைபடம் 01. இலங்கையின் வருடாந்த மழைவீழ்ச்சி
வெப்பநிலை
இலங்கையின் உயர் வளிமண்டல வெப்பநிலையில் காணக்கூடியதாக உள்ள பிராந்திய மாற்றங்களுக்கு முக்கியமாக அகலாங்குகளை விட நெட்டாங்குகளின் மாற்றமே தாக்கம் செலுத்துகின்றது. காலத்திற்குக் காலம் சூரியனின் பயணத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட ஒருசில புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாதாந்த சராசரி வெப்பநிலையில் சிறிதளவு வேறுபடும். இலங்கையின் வருடாந்த சராசரி வெப்ப நிலையினை உற்றுநோக்கும் போது தாழ் நிலப் பிரதேசத்தில் பொதுவாக சமநிலையான வெப்ப நிலையும் மேட்டு நிலங்களில் விரைவாக குறைவடையக் கூடிய வெப்ப நிலைத் தன்மை ஒன்றினையும் வெளிக்காட்டுகின்றது. தாழ் நிலங்களில் 27.50C வருடாந்த வெப்ப நிலையுடன், 100 மீ. முதல் 150 மீ. நெட்டாங்கு வரையில் 26.50C முதல் 28.50C வரையில் இடையில் இருப்பதுடன், வருடாந்த சராசரி வெப்பநிலை மாறுபடும். மேட்டு நிலப் பகுதியில் நெட்டாங்கு அதிகரிப்பதனால் மிகவும் விரைவாக வெப்ப நிலையானது குறைவடைகின்றது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ இற்கு மேலே அமைந்துள்ள நுவரெலியாவின் வருடாந்த சராசரி வெப்ப நிலையானது 15.90C ஆகக் காணப்படுகின்றது. மாதாந்த சராசரி வெப்ப நிலையின் பிரகாரம் மிகவும் குளிரான மாதமாக ஜனவரி மாதம் விளங்குவதுடன், மிகவும் சூடான மாதங்கள் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் என்பனவாகும்.
கரையோரத் தாழ் நிலப் பிரதேசங்களின் வருடாந்த சராசரி வெப்ப நிலையானது 270C முதல் (கடல் மட்டத்திலிருந்து 1900 மீ. இற்கு மேல்) மத்திய மலை நாட்டின் நுவரெலியா 60C இற்கு இடையிலும் மாறுபடும். சூரிய ஒளி அதிகம் காணப்படும் கடற்கரை பிரதேசம் நாட்டின் உள்நாட்டு மழைக் காடுகளில் காணப்படுகின்ற வித்தியாசமான தன்மையானது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக் கூடிய தன்மையினைக் கொண்டுள்ளது.
Annual temperature
காலநிலை மாற்ற கால எல்லைகள்
நாட்டிலே மேற்குறிப்பிட்ட புவியியல் தன்மை மற்றும் தென்மேல் மற்றும் வடகீழ் பருவக் காற்று பிரதேச ரீதியிலான காற்று என்பன இலங்கையின் காலநிலையில் அதிக தாக்கம் செலுத்தும் காரணிகளாகக் காணப்படுகின்றன. இலங்கைக்கு 12 மாத காலப் பகுதியினுள் தாக்கம் செலுத்தும் கால நிலை மாற்றத்தினை பின்வருமாறு 04 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  1. முதல் இடை பருவக் காற்றுக் காலம் : மார்ச் - ஏப்ரல்
  2. தென்மேல் பருவக் காற்றுக் காலம் : மே, செப்தெம்பர்
  3. இரண்டாவது பருவக் காற்றுக் காலம்: ஒக்தோபர் - நவம்பர்
  4. வடகீழ் பருவக் காற்றுக் காலம் : செப்டம்பர் - பெப்ரவரி
முதல் இடை பருவக் காற்றுக் காலம் : (மார்ச் - ஏப்ரல்)
இந்த காலத்திற்கு தனிச் சிறப்புமிக்க காலநிலை அறிகுறியானது விசேடமாக பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக் கொண்ட காலநிலையாகும். இந்தக் காலத்தினுள் மழை வீழ்ச்சியின் பரவலானது தென்மேல் பள்ளத் தாக்குகளின் சில இடங்களுக்கு 700 மி.மீ. மழை வீழ்ச்சியை மேலதிகமாகப் பெற்றுக்கொடுப்பதுடன், (காரகல 771 மி.மீ.) மலைநாட்டின் முழுமையான தென்மேல் பகுதிக்கும் 250 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைப்பதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணக் கூடிய தெளிவான வேறுபாடு (யாழ்ப்பாணம் 78 மி.மீ., ஆணையிறவு 85 மி.மீ.) தவிர நாடு முழுவதும் எல்லாப் பிரதேசங்களினதும் மழை வீழ்ச்சியின் அளவு 100 மி.மீ. இருந்து 250 மி.மீ. வரை மாறுபடுகிறது.
First Inter-monsoon Season (March - April)
தென்மேல் பருவக் காற்றுக் காலம் : (மே, செப்தெம்பர்)
இந்தப் பருவக் காற்றுக் காலத்தினுள், காற்றுடன் கூடிய காலநிலையானது முதல் பருவக்காற்றுக் காலம் முழுவதும் காணப்பட்ட சூட்டைத் தணிக்கும். இரவு பகல் இரண்டிலும் தென்மேல் பருவக் காற்றின் மூலம் தென்மேல் பகுதிக்கு இடையிடையே மழை வீழ்ச்சியினை எதிர்பார்க்கலாம். இந்த காலப் பகுதியினுள் கிடைக்கும் மழைவீழ்ச்சியானது 100 மி.மீ. இருந்து 3000 மி.மீ. வரையிலான அதிக மழைவீழ்ச்சி வரையில் மாறுபடும். மேற்குப் பள்ளத் தாக்குகளின் மத்திய உயர் நிலங்களிற்கு அதிக மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. மேற்குப் பள்ளத்தாக்குகளின் மத்திய மேட்டு நிலங்களிற்கு உயர் மழைவீழ்ச்சியும் கிடைக்கின்றது. (கினிகத்ஹேன 3267 மி.மீ., வட்டவளை 3252 மி.மீ., நோர்டன் 3121 மி.மீ.) இந்த உயர் பிரதேசங்களில் இருந்து மிகவும் உயர்ந்த மேட்டுநிலப் பிரதேசங்கள் வரையில் விரைவாக மழைவீழ்ச்சி குறைவடைவதுடன், இந்நிலை நுவரெலியாவில் 853 மி.மீ. வரை குறைவடைகின்றது. தென்மேல் கரையோரப் பிரதேசங்களிற்கு இந்த மாற்றமானது மிகவும் குறைந்த வேகத்தில் காணப்படுவதுடன், இந்த ஐந்து மாதத்தினுள் தென்மேல் கரையோரப் பகுதிக்கு 1000 மி.மீ. முதல் 1600 மி.மீ. வரையான மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. குறைந்த அளவு வடக்கு மற்றும் வடகிழக்கு பிரதேசங்களில் பெறப்பட்டுள்ளது.
Southwest -monsoon Season (March - April)
இரண்டாவது பருவக் காற்றுக் காலம்: (ஒக்தோபர் - நவம்பர்)
பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை இந்தக் காலத்திற்குரிய காலநிலை அறிகுறியாகும். முதல் பருவக்காற்று காலத்தைப் போன்றல்லாது, வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் மற்றும் சூறாவளி என்பன இந்த இரண்டாம் பருவக் காற்றுக் காலத்தில் அரிதானதாகவே காணப்படும். இந்த நிலையின் கீழ் ஒரு சில சந்தர்ப்பங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு என்பவற்றிற்கு முகம்கொடுத்து நாடு முழுவதும் கடும் புயல் மற்றும் பரந்து காணப்படும் மழை உடனான காலநிலைத் தன்மைக்கு முகம்கொடுக்கும். ஒக்தோபர் - நவம்பர் பருவப் பெயர்ச்சிக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையிலே மிகவும் சிறந்த சமநிலையான மழைவீழ்ச்சித் தன்மையொன்றினைக் கொண்ட காலமாகக் காணப்படுகின்றது. சுருங்கக் கூறின் நாடு முழுவதிலும் இந்தக் காலப் பகுதியில் 400 மி.மீ. வரையிலான மேலதிக மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுவதுடன், தென்மேல் பள்ளத்தாக்கு 750 மி.மீ. முதல் 1200 மி.மீ. பரப்;பினைக் கொண்ட உயர் மழைவீழ்ச்சி ஒன்றினைக் கொண்டுள்ளது. (யட்டியாந்தோட்டை வேவெல்தலாவ தோட்டத்தில் 1219 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
Second Inter-monsoon Season (October-November)
வடகீழ் பருவக் காற்றுக் காலம் : (செப்டம்பர் - பெப்ரவரி)
அதிகம் குளிரான காலை நேரம் தவிர்ந்த ஏனைய காலங்களில் மிகவும் விரும்பத்தக்க சிறந்த காலநிலையினைக் கொண்டு நாட்டின் அதிகமான பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் குளிரான எனினும் வெப்பமான காலநிலைத் தன்மை ஒன்றினை கொண்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து வீசக் கூடிய உலர்ந்த குளிர் காற்று நாட்டிலே குடிகொண்டிருக்கும். மேகங்களற்ற வானத்திலிருந்து பிரகாசமாக சூரிய ஒளியுடன் கூடிய பகல் பொழுதும் விரும்பத்தக்க குளிரான இராக் காலத்தையும் கொண்டு காணப்படும். இந்த காலப் பகுதியினுள் கூடிய மழைவீழ்ச்சி மலை நாட்டின் வடகீழ் பள்ளத்தாக்குப் பிரதேசங்களிலும் நக்கில்ஸ்ஃரன்கல மலைத் தொடரின் கிழக்கு பள்ளத்தாக்குகளிலும் காணப்படும். இந்த காலப் பகுதியினுள் அதிகப் படியான மழைவீழ்ச்சி கொபோநெல்ல தோட்டத்திலும் (1281 மி.மீ.) மிகக் குறைந்த மழைவீழ்ச்சி புத்தளத்தை அண்டிய மேற்குக் கரையோரப் பிரதேசத்திலும் (177 மி.மீ.) பதிவாகியுள்ளது.
Northeast -monsoon Season (December - February)
Northeast -monsoon Season (December - February)
இலங்கையானது வடக்கே அகலாங்கு 5 – 10 இற்கும் இடையே அமைந்துள்ளமையால் நாட்டிற்கு இளஞ்சூடான காலநிலையும், நடுத்தர அளவிலான கடற்காற்றும், ஈரத் தன்மைமிக்க காலநிலையையும் கொண்டு காணப்படும். சராசரி வெப்ப நிலையானது மத்திய மலைநாட்டின் நுவரெலியாவில் 15.80C (குளிர் காலத்தில் ஒரு சில நாட்கள் உறைபனியாக விழக் சுடும்.) ஆகக் குறைந்த பெறுமதியில் இருந்து வடகீழ் கடற்கரையின் திருக்கோணமலையில் 290C அளவில் ஆகக் கூடிய பெறுமதி (வெப்பநிலை 290C வரையில் அதிகரிக்கக் கூடும்) வரையிலான வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக எடுத்துக்கொண்டால் நாட்டின் சராசரி வருடாந்த வெப்பநிலை 160C - 280C இடைப்பட்டதாகும். பகல் இரவு வெப்பநிலை 4 – 7 வரையில் மாற்றமடையக் கூடும். ஜனவரி மிகவும் குளிரான மாதம் என்பதனால் முக்கியமாக மத்திய மலைநாட்டில் வாழும் மக்கள் கபாய் மேற்சட்டை மற்றும் குளிருக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டிய காணப்படும். கோடைக்கால பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் வருகின்ற மே மாதமானது சூடான காலப்பகுதியாகும்.
Seasonal Rainfall
மழைவீழ்ச்சி மாற்றமானது இந்து சமுத்திரத்தின் வங்காள விறிகுடாவின் பருவக் காற்றின் தாக்கத்திற்கேற்ப இடம்பெறுவதுடன், இது பிரதானமாக நான்கு காலங்களில் இடம்பெறுகின்றது. முதலாவது தென்மேற்குத் திசையில் இருந்து காற்று உருவாகி இந்து சமுத்திரத்தில் இருந்து ஈரத் தன்மையினைக் கொண்டுவரும் மே நடுப்பகுதி முதல் ஒக்தோபர் வரையிலான காலப் பகுதியாகும். இந்த காற்றானது மத்திய மலைநாட்டு சரிவினை அடையும்போது அந்தக் காற்றானது மலைச் சரிவுப் பிரதேசத்திற்கும் மற்றும் நாட்டின் தென்மேற்குப் பகுதிக்கும் கடுமையான மழைவீழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. காற்றின் முகப்பில் காணப்படுகின்ற சில பிரதேசங்களுக்கு ஒரு மாதத்தில் 250 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைக்கின்ற போதிலும் கிழக்கு மற்றும் வட கிழக்கு பருவக் காற்றின் சரிவுகளுக்கு மிகவும் குறைந்த மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. இரண்டாவது காலம் ஒக்தோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறும் பருவக்காற்றிற்கு இடைப்பட்ட ஒரு சில மாதங்களாகும். இந்தக் காலப்பகுதியில் திடீர் புயல் காற்று ஏற்படுவதுடன், நாட்டின் தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இருள் நிறைந்த மேகங்கள் இடையிடையே மழை பெய்யச் செய்கின்றது. மூன்றாவது காலம் அதாவது திசெம்பர் முதல் மார்ச் காலாண்டுப் பகுதி வரையில் வங்காள விறிகுடாவிலிருந்து ஈரத்தன்மையினை கொண்டுவந்து வடகிழக்குத் திசையிலிருந்து பருவப்பெயர்ச்சி காற்றினை கொண்டுவருகின்றது. இந்த ஒருசில மாதங்களினுள் நாட்டின் வடகிழக்குப் பிரதேசம் 125 மி.மீ. மழைவீழ்ச்சியின் ஊடாக வெள்ளப் பெருக்கு அபாய நிலையொன்றினைத் தோற்றுவிக்க முடியும். மென்மையாக மாற்றமடையக் கூடிய காற்றுத் தன்மை மற்றும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழையினைக் கொண்ட இடை பருவப்பெயர்ச்சிக் காலமொன்று மார்ச் முதல் மே வரையில் ஏற்படும்.
தென் மேற்கு மற்றும் மலைநாட்டுப் பிரதேசங்களில் பொதுவாக ஈரத் தன்மை உயர்வடைவதுடன், காலத்திற்குரிய மழை வீழ்ச்சித் தன்மைகள் அதில் தாக்கம் செலுத்தும் உதாரணமாக கொழும்பில் பகல் காலத்தின் ஈரத் தன்மையானது வருடம் முழுவதும் 70 வீதமாகக் காணப்படுவதுடன், பருவக் காற்று காலத்தில் யூன் மாதத்தில் 900C வரையில் அதிகரிக்கின்றது. அநுராதபுர பிரதேசத்தில் பகல் காலத்தில் ஈரத் தன்மையானது பருவப்பெயர்ச்சிக்கு இடைப்பட்ட காலமான மார்ச் காலப்பகுதியில் 60 வீதமளவில் மிகவும் குறைவான பெறுமதியினைக் கொண்டுள்ளபோதிலும், நவம்பர் திசெம்பர் மழைக் காலத்தில் 79 வீதம் வரையில் அதிகரிக்கின்றது. மத்திய மலைநாட்டிலே கண்டியில் பகல் காலத்தில் ஈரத் தன்மையானது பொதுவாக 70 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட பெறுமதியைக் கொண்டுள்ளது.
Climate - Colombo Climate - Nuwaraeliya
Climate - Anuradhapura
காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நிலையம்
காலநிலை மாற்றங்கள் பற்றிய பிரச்சினைகளை அறிமுகம் செய்வதற்காக 1999 யூன் மாதம் 11 ஆம் திகதிய அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் ஊடாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒரு பகுதியாக காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நிலையம் நிறுவப்பட்டது.
Centre for Climate change StudiesCentre for Climate change Studies
இந்த நிலையத்தின் பிரதான தொழிற்பாடுகள் பின்வருமாறு,

  1. காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள்
  2. காலநிலை மாற்றங்களை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல.
  3. காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி விளக்குதல்.
  4. தகவல்களை ஒன்றுதிரட்டலும் பங்கிடலும்.
  5. காலநிலை மாற்றங்கள் பற்றிய முன்மாதிரிகளை செயற்படுத்தல்.
  6. ஆவணத் தயாரிப்புச் சேவைகள்
  7. உரிய சர்வதேச முகவர் நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளல்.
  8. காலநிலை மாற்றங்கள் பற்றிய விரிவுரைகளுக்கு ஒத்துழைத்தல்.
தற்போது இந்த நிலையம் வளிமண்டலவியல் திணைக்கள வளாகத்திலேயே அமைந்துள்ளதுடன், அதன் தொழிற்பாடுகள் பல்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சிரேஷ்ட விஞ்ஞானிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலதிகத் தகவல்கள்
காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம்,
383, பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.

புவியியல் What is Geology ?


புவியியல்

What is Geology ? - An Brief Study

புவியியல் - விளக்கம் :

நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவியியல் எனப்படும். எவ்வித பொருள்களால் பூமி உருவானது, அப்பொருள்களின் வடிவங்கள் என்ன, எவ்வாறு உருவாகின்றன என்று ஆராய்வதே புவியியலின் சாராம்சமாகும். பூமியில் புழங்கிய உயிரினங்கள் பற்றிய விவரங்களும் புவியியலின் அங்கமாகும். ஆக, புவியியலின் சிறப்பம்சம், பூமியில் உள்ள பொருள்கள், பொருள்களின் உருவாக்கம் மற்றும் உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்வதாகும்.

 

புவியியல் என்பது பல பிரிவுகள் அடங்கிய விஞ்ஞானமாகும். பூமியின் இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை ஆராய்வதோடு நில்லாமல் பூமி தளத்தின் செயல்பாடு, உருவாக்கம், மற்றும் மூலத்தை பற்றிய கல்வி இது. இதன் மையம் பூமியில் பரவி கிடக்கும் தாதுப்பொருள்களின் உருவாக்கம் மற்றும் விநியோகத்தை சுற்றியே இருக்கிறது.



 

புவியியலை அறிந்துக்கொள்ளும் அவசியம் என்ன ?

இந்த கேள்விக்கு பல்வேறு விதமாக பதில் உரைக்கலாம். புவியியல் வல்லுநர் பற்பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார். எரிபொருள் சிக்கணம் மற்றும் வானிலை மாற்றத்தை முன்னிறுத்தியே அவர் செய்கைகள் அமையும். இதே போல் பூமியில் எரிபொருள்கள் மூலங்களை கண்டறிவதுவளங்களை செவ்வனே பயன்படுத்துதல்மற்றும் மக்கள் மத்தியில் எரிபொருள் சிக்கனத்தை பற்றிய விழிப்புணர்சியை பரப்புவது போன்றவை அவர் தலையாய வேலையாகும். தற்போது உலகம் முழுவதும்  பயணத்திற்கும், உற்பத்திக்கும் பயன்படும் எண்ணை வளம் சார்ந்த புவியியல் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறதுபுவியியல் அறிஞர்கள் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து, அதை தெரிவிப்பதால் மக்களை பாதுகாக்கும் பணியையும் செய்கிறார்கள்.



புவியியலின் கால அளவுகோல்கள் :


புவியியலின் கால அளவுகோல் பூமி தோன்றி 4.5 கோடி ஆண்டுகளுடன் தொடங்குகிறது.  சமகாலத்தில் ஆரம்பித்து கீழே செல்ல செல்ல புவியியலின் வரலாறு அளவுகோலில் இடம் பெற்றுள்ளது.  மிக நீண்ட கால இடைவெளியில் தொடங்கி , சகாப்தம், காலகட்டம், என புவியலின் அளவு கோல் வரையறுக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக 570 கோடி ஆண்டுகள் முன்புள்ள பூமியின் ஆரம்ப நிலை புவியியல் வரலாறாக  கருதப்படுகிறது. இந்த காலகட்டம் "ஃபினார்சானிக் காலம்" என அழைக்கபடுகிறது.

 

மூன்று சகாப்தங்களாக "ஃபினார்சானிக் காலம்" வகுக்கப்படுகிறது. இதில் சமீப கால சகாப்தம் "சினோசோனிக் சகாப்தம்" என்று அழைக்கப்படுகிறது. ஃப்ளோரிடா" நகரில் பூமி தளத்திற்க்கு சில நூறு அடிகள் ஆழத்தில் காணப்பட்ட பாறைகள் மற்றும் நீர் நிலைகள் இந்த சகாப்தத்தை சேர்ந்ததாகும். "சினோசோனிக் சகாப்தம்" மேலும் இரு வகை காலமாக பிரிக்கப்படுகிறது. அவை மூன்றாம் மற்றும் நான்காம் நிலை காலங்கள் என அறியப்படுகின்றன. இது போல் புவியியல் அறிஞர்கள் ஒவ்வொரு காலதிற்கும் ஒரு குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளார்கள். இந்த பெயர்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் சார்ந்து அமைக்கப்பட்டன.

 

உதாரணத்திற்கு "செனோசோனிக்" என்றால் புதிய உயிர் " என்று பொருள்.  அக்காலத்தில் தான் பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பூக்கள் தோன்றும் செடிகள் நவீன வடிவில் உருவாகின. "ரேடியோ மெட்ரிக்" எனும் துல்லிய நுணுக்கங்கள் மூலமாக அறிஞர்கள் புவியியல் மாற்றங்களை மிகச்சரியாக கணித்தார்கள்.  பொட்டாஷியம் போன்ற மக்கிய பொருள்கள் மற்றும் கதிவீச்சுகள் அளவுகளையும் ஒப்பிட்டு பாறைகளின் வயதை மிக சரியாக அறிஞர்கள் அனுமானித்தார்கள். புவியியல் கால எல்லைகளை விளக்கும் விதமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை காணுங்கள்.




புவியியல் அறிஞர்களின் பணி என்ன ?

பெரும்பாலும் நம் பூமியின் சரித்திரத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் அறிஞர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அறிந்துகொள்ளும் சரித்திரத்தின் மூலம் எதிர்காலத்தில் பூமியை பாதிக்ககூடிய செயல்களை அவர்கள் கணிக்கிறார்கள்.


 

புவியியலின் சிறப்பு பிரிவுகள் :

அறிஞர்கள் புவியியலில் உள்ள கீழ்காணும் பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்.

 

பொருளாதார புவியியல்உலோக மூலப்பொருளின் கூறுகளை ஆராய்தல்அவை உருவாகும் இயக்கமுறையை பற்றி அறிந்துகொள்ளுதல்.

 

பொறியியல் புவியியல்புவியியல் விஞ்ஞானத்தை பொறியியல் சாத்தியகூறுகள் மூலம் அறிந்து கொள்ளுதல். கட்டுமானம், இருப்பிடம், பொறியியல் செயல்பாடுகள் ஆகிவற்றை பாதிக்கும் புவியியல் காரணிகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.

 

புவி இயற்பியல்புவியீர்ப்பு, பூமியின் செயல்பாடுகள் , மின்சாரம், மற்றும் பூமியின் காந்த உடைமைகளில் இயற்பியலின் பயன்பாட்டை பற்றி அறிந்து கொள்ளுதல்.

 

புவி வேதியியல்பூமியில் அமைந்துள்ள பாறைகளின் வேதியியல் உட்கூறு மற்றும் அவற்றில் காணப்படும் தாதுப்பொருள்களில் இருக்கும் வேதியியல் அணுக்களை பற்றி அறிந்து கொள்ளுதல்.

 

புவியியல் காலவரிசை : பாறைகளின் தோன்றுகாலம், வடிவமாற்றம் மற்றும் அவற்றில் உள்ள தாதுக்களை பற்றி தீர்மானித்து அறிந்து கொள்வது.

 

புவி உருவியல் : நில அமைப்புகள் மற்றும் அவை தோன்றிய விதங்களை பற்றி அறிந்து கொள்வது.

 

நீர் புவியியல் : பூமிக்கடியில் உள்ள நீர் நிலைகள், அவற்றின் மூலம் மற்றும் இயக்கம் பற்றி அறிந்து கொள்வது.



 

உஷ்ணம் சார்ந்த புவியியல் : பூமியின் உஷ்ண வேறுபாடுகள், எரிமலைகளின் உஷ்ண சமன்பாடுகள்,உஷ்ண செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது.

 

தாங்கு தட்டு புவியியல் : பாறைகளின் அமைப்பு, மற்றும் பூமிக்கடியில் அமைந்துள்ள தட்டுகளின் அழுத்தம் , செயல்பாடுகள் ஆகிவற்றை அறிந்து கொள்வது.

 

பாறைக்கூறு புவியியல்பாறைகள் மற்றும் தாதுப்பொருள்களின் கூறுகளால் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆராய்வது.

 

கடலியல் சார்ந்த புவியியல் : கடல்களின் அடிமட்டத்தில் படிந்துள்ள இயற்பியல், வேதியியல் அணுக்கூறுகள் மற்றும் கடற்கரையில் காணப்படும் படிவங்களை பற்றி அறிந்து கொள்வது. கடற்புவியியல் கடல் இயற்பியல் மற்றும் பூமி தட்டு அறிவியலுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையது.

 

வானிலை புவியியல்பூமியின் வரலாற்றிக்குட்பட்ட சீதோஷன நிலைகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு அவற்றால் பூமியின் மீது ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்வது.

 

புராதன புவியியல் : பூமி வாழ் உயிரினங்களின் எச்சங்களை ஆராய்ந்து, அவற்றின் காலகட்டத்தின் புவியியல் செயல்பாடுகளை அறிந்து கொள்வது.

 

மண் புவியியல் : மண் சார்ந்த அமைப்பு மற்றும் மண் தரங்களை பற்றிய ஆராய்ச்சி.

 

பெட்ரோலியம் புவியியல் : ஹைட்ரோகார்பன் தேடுதலில் சமந்தப்பட்ட, பூமியின் அடித்தட்டு படிமங்கள் பற்றி அறிந்து கொள்வது.

 

படிம புவியியல்பூமியின் கீழ் மட்டத்தில் அமைந்துள்ள பாறை தட்டுக்கள் மற்றும் சமகால பாறை படிவங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வேறுபாடுகளை அறிந்து கொள்வது.

 

அமைப்பு புவியியல் : புவியியல் சார்ந்த பொருள்களின் அமைப்பு வடிவங்கள் பற்றி அறிந்து கொள்வது.அவற்றின் வரலாற்றை அலசுவது.

 

எரிமலை புவியியல் : எரிமலைகளின் வெப்ப அளவு, குழம்புகளின் அமைப்பு, மற்றும் மிச்சங்களை பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்வது.


 

புவியியல் பாட நிரல்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் :

புவியியலை தொழில் துறையாக தேர்ந்தெடுக்க , அத்துறையில் எம். அல்லது எம்.எஸ்ஸி முடித்திருக்க வேண்டியது அவசியமாகும்நம் நாட்டில் இத்துறை சார்ந்த கல்வி அளிக்கும் சில கல்வி நிறுவங்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம்அண்ணாமலை பல்கலைக்கழகம், அமராவதி பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் போன்றவை ஆகும். "யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்" தேர்வுகள் நடத்துகிறதுமத்திய அரசு புவியியல் பணிகள் மத்திய நீர் நிலை கழகம்புவியியல் கருத்தாய்வு கழகம், நிலக்கரி கழகம்.என்.ஜி.சி, ஹின்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவனங்களிடம் உள்ளனராணுவத்திலும் புவியியல் வல்லுநர்களின் சேவை தேவைப்படுகிறது.


 

வேலை வாய்ப்புகள் :

புவியியல் அறிவியல் கழகம், சுரங்க தொழில்நகராட்சி அலுவலகங்கள்கட்டுமான துறை, எண்ணை வளத்துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. பட்டதாரிகள் அறிவியல்தொழில் வளர்ச்சி நிறுவங்கள், அரும்பொருள் காட்சியகம் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தனிப்பட்ட ஆராய்ச்சிகளும் மேற்க்கொள்ளலாம்.